Monday, 31 December 2012

நீ எதையும் எதிர்பாராது செய்யுமுதவி..!
ஒர் நாள்
எதிர்பாராத நேரத்தில் உனக்கே உதவி செய்யும்....!!
-இரா.சுதர்சன்

Thursday, 20 December 2012

விளக்கனைத்தால்
வீட்டின் ஒளி பெருக்க..!
விலைமாது....!!
-இரா.சுதர்சன் 

Friday, 7 December 2012

சிறை சென்று விடுதலையானேன் - ஆயினும்
சிறைவாசம் செய்யவே சொல்கிறது என் மனம்
என்றும் உன்னிடத்தில்....!!
-இரா.சுதர்சன்

Tuesday, 6 November 2012

காதலெனும்
பாடம் படித்துப்
பெற்றேனொரு
பெரும் பட்டம்..!
பைத்தியக்காரனென்று....!!
-இரா.சுதர்சன் 

Saturday, 3 November 2012

இதழ்களை
படிக்க ஆசை தான்..!
அவைகள் 
அவளின் 
உதடுகளாக இருப்பின்....!!
-இரா.சுதர்சன்

Sunday, 21 October 2012

தூக்கம்..!
சுகதுக்கம் 
இன்பதுன்பங்களை 
மறக்கவைத்து 
மனிதனை 
நடுநிலையக்கும் 
மாமருந்து..!!
-இரா.சுதர்சன் 

Saturday, 29 September 2012

உன் நண்பர்கள் மீது மட்டுமல்ல
நீ சுவாசிக்கும் காற்றின் மீதும்
அவ்வப்போது பொறாமை தானடி எனக்கு....!!
-இரா.சுதர்சன் 
உன்னால் உடைக்கப்பட்ட
என் இதயக்கண்ணாடியிலும் கூட
நீயே இருக்கிறாய்..!
ஆனால் என்ன
அன்றோ ஒரு பிம்பமாய்
இன்றோ பல....!!
-இரா.சுதர்சன் 
பொறாமை..!
உனக்காக நானிருக்க
உன் இதயம்
ஏன் தான் துடிக்கிறதோ....!!
-இரா.சுதர்சன் 
கவிதை எழுத
கண்களை மூடினேன்
புலப்பட்டது உன்
கண்களின் பாசை மட்டுமே
கவிதையாய்....!!
-இரா.சுதர்சன்

Wednesday, 26 September 2012

மனம்
முள்ளென தெரிந்தும்
பரிக்கச்சொல்லும்
காதல் ரோஜாவை....!!
-இரா.சுதர்சன் 
அறியா பாதைகள்
அறிந்துப்போகும்
ஆணவம்
அழிந்திடும் போது....!!
-இரா.சுதர்சன் 
நானிறந்தேன்
என்றறியாமல் நித்தம்
என்மேல் நீர் தெளித்து
எழுப்ப முயற்சிக்கிறாள்
இந்தப்பூக்காரி....!!
-இரா.சுதர்சன் 
ஓய்வெடுத்து ஓயும்
நானுனை ஓயாமல்
நினைத்தாலும் ஓய்வதில்லை....!!
-இரா.சுதர்சன் 

Saturday, 25 August 2012

பள்ளிகளை
பள்ளிகளாக
புதுப்பிப்போம்..!
வகுப்புகளை
வகுப்பின்றி
புனரமைப்போம்..!
பூட்டியதோர்
பூட்டைப்பிளந்து
புத்துயிர்பெருவோம்....!!
-இரா.சுதர்சன்
நீர் இருந்தும்
வற்றிய கிணறுதான்..!
உனை காணாத என் கண்கள்....!!
-இரா.சுதர்சன்

கவிதையெழுத
வார்த்தைகள் எதற்கு..!
உன் பட்டுப்பார்வையில்
பற்றிக்கொண்டேன்....!!
-இரா.சுதர்சன் 
வயிற்ரை நிரப்ப
வயிற்ரை கழுவுகிறாள்..!
விலையில்லாமல்
விலைக்காக
விலை மாது....!!
-இரா.சுதர்சன் 
காதல்
பல
கற்பனைகளுக்கு காரணமாகி
கல்லறைக்கு வழிகாட்டுமோர்
விதியின் பாதை....!!
-இரா.சுதர்சன்

சொல்லி சொல்லி பார்க்கிறேன்
சொல்லதான் முடியவில்லை..!
உன் பெயரை தவிர
வேறோர் சிறந்த கவிதையை...!!
-இரா.சுதர்சன் 

Sunday, 22 July 2012


தப்பு கணக்கு.....

      பொருட்கள் உருளும் சத்தத்தை கேட்ட மணிமேகலை தூக்கத்திலிருந்து கண்விழித்தெழுந்து மின்விளக்கை ஒளிரவிட்டார், மியாவ் மியாவ் என்று மெல்லிய குரலில் கத்திக்கொண்டு மதுவின் செல்லப்பூனை ஓடியது, மணிமேகலை சுவர் கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அதிகாலை நான்கு மணியை காட்டியது உடனே தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் மதுவை எந்திரி கண்ணு பருச்ச  இருக்குது நேரமா எழுப்ப சொன்னியே எந்திரி கண்ணு என்று தன் மகனை செல்லமாக எழுப்பினார் மணிமேகலை ம்ம்.... டைம் என்ன மா என்றான் மது நாலாச்சு மது என்றார் மதுவோ பத்து நிமிசம் தூங்கிக்கிறேன் மா அப்புறமா எழுப்பு என்று கூறி மீண்டும் உறங்க ஆரம்பித்தான்,பத்து நிமிடதிர்க்குப்பிறகு  மணிமேகலை மதுவை எழுப்ப மதுவோ ரெண்டு நிமிசம் தா தூங்குனேன் அதுக்குள்ள பத்து நிமிசம் ஆயிடுச்சா என்ன கொடுமடா சாமி இது என்று கட்டிலில் படுத்தவாறே அரை தூக்கத்தில் புலம்பிக்கொண்டு அம்மா டீ மா என்றான், அஞ்சு நிமிசம் கொண்டு வந்து தரேன் நி அதுக்குள்ள படிக்க ஆரம்பி கண்ணு என்று கூறி சமயலறைக்குள் சென்றார் மணிமேகலை,

      கணக்கு, அனைத்துப்பாடங்களிலும் எப்படியோ தேறிவிடும் மது கணக்கு பாடத்தில் மட்டும் கொஞ்சம், இல்லை இல்லை மிகவும் மட்டம் தான், கணக்கு  புத்தகத்தை புரட்டி புரட்டிப்பார்த்தான் மது ஒன்றும் விளங்கா நிலையில் இதமாய் குளித்துவிட்டு பதமாய் சிற்றுண்டியையும் முடித்துவிட்டு மா நா பள்ளி கூடத்துக்கு போயிட்டு வரேன் மா என்று மணிமேகலையிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டான் மது,


        பள்ளியின் விளையாட்டு திடலில் சிரித்து பேசிக்கொண்டிருந்த தன் நண்பர்கள் சரவணன் மற்றும் கிரிதரின் அருகே சென்ற மது, என்னடா சந்தோசமா சிருச்சு பேசிட்டு இருக்கீங்க, நல்லா படுச்சுட்டு வந்துடீங்க போல ராஸ்கல்ஸ் ம்ம் நடத்துங்கடா  நடத்துங்க என்று கூறிக்கொண்டே நண்பர்கள் படித்து வந்து விட்டார்களே என்று சற்று மன வேதனையுடன் வகுப்பறை நோக்கி சென்றான் மது, வகுப்பின் முகப்பருகே தனது நெருங்கிய நண்பர்களான மோகன், நிஷா, அசோக், அன்னபூரணி மற்றும் சசி ஆகியோர் முகம் தளர்ந்தது அமர்ந்துக்கொண்டிருக்க அவர்களின் அருகே சென்ற மதுவிற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது நண்பர்களின் முகங்கள், நண்பர்களுடன் சேர்ந்து அமர்ந்த மது சந்தோசமாக என்னடா எல்லாரும் எதையோ தொலச்சுட்டு உக்காந்து இருக்கீங்க போல என்று கேட்க மோகனோ எதுவுமே படிக்கலடா மாமா பெயில் ஆயிருவோமொனு பயமா இருக்கு பொண்ணுக முன்னாடி மானம் போக போகுதுடா மாமா என்று வருத்தத்தோடு கூற மதுவின் மனமோ பட்டாம்பூச்சி போல பட படவென பறந்தது முகம் புதிய மலரைப்போல மலர்ந்தது, டேய் மோகன் நீ தா  நல்லா படிக்குற பையனாச்சே நீயே இப்புடி சொன்ன எப்புடி டா என்று கூறி வருந்துவதைப்போல் நண்பன் படிக்கவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொண்டான் மது, நீ சந்தோசமா இருக்குறத பாத்தா நல்லா படுச்சுட்டு வந்துருப்ப போல என்ன விசயம் மது என்றால் அன்னபூரணி , இல்ல பூரணி நானும் படிக்கல எனக்கு கம்பெனிக்கு ஒரு ஆள் கூட இல்லையேனு நெனச்சேன் ஆனா இங்க தா ஒன்னுக்கு அஞ்சு பேர இருக்கீங்களே அதான் சந்தோசமா இருக்கேன் ஹா ஹா ஹா ஹா என்று மது வாய்விட்டு சிரிக்க டேய் வாய்குள்ள கொசு போயரபோகுது கொஞ்ச மூடுங்க சார் என்றான் அசோக், சிரிப்பை சற்று அடக்கிய மதுவிடம் ஏன்டா பெயில் ஆயிட்ட பொண்ணுக முன்னாடி மானம் போகுமுன்னு கூட இல்லாம எப்புடி டா இப்புடி சிரிக்கிற என்றான் சசி பின்ன எம்மானம் மட்டும் போன சங்கடப்படலாம் படிக்கிற பசங்க உங்க மானமும் என்கூட சேந்து போக போகுதுன்னு நெனைக்கும் போது ரொம்ப பெருமையா சந்தோசமா இருக்குடா சசி நம்மதான்டா உண்மையான இணைபிரியா நண்பர்கள் என்றான் மது சிரித்துக்கொண்டே,

 மாணவ மாணவிகள் பரபரப்பாக பரிட்சைக்கு படித்துக்கொண்டிருக்க மணி ஒன்பது பதினைந்தை தொட பரிட்சை அறைக்கு செல்ல மணி ஒலித்தது மதுவும் அவனது நண்பர்களும் தங்களின் முகங்களை மாறி மாறி பார்த்துக்கொண்டு பரிட்சை அறைக்குள் சென்று பரிட்சை எண்னை சரிபார்த்து அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தனர் தனது முன் இருக்கையில் அமர்ந்திருந்த நன்றாக படிக்கும் தன் மாமன் மகளான அஞ்சலியிடம் என்ன அஞ்சு நல்லா படுச்சுட்டு வந்தியா பருட்சைய நீ நல்லா எழுதுனாதா மாமா பாஸ் பண்ணமுடியும் புருஞ்சுச்சா, உனக்கு புருஞ்சுருக்குமுன்னு நெனைக்கிறேன் என்றான் சற்று பவ்வியமாக,டேய் மாமா இது எக்சாம் ஹால் கொஞ்ச பேசாமதா இரேண்டா எழுதும்போது கண்டிப்பா ஏன்சர் சீட்ட  காமிக்கிறேன் போதுமா  என்றால் அஞ்சு, மாமா மேல எம்புட்டு பாசம் என் செல்லத்துக்கு என்று கூறி புன்னகைத்துக்கொண்டான் மது, மணி ஒன்பது முப்பதாக சில நிமிடங்களே இருந்த நிலையில் பரிட்சையறைக்கு எந்த ஆசிரியரும் வராத நிலை, மதுவும் அவனது நண்பர்களை தவிற அனைவரும் சற்று பதட்டமாகவே இருந்தனர் மணி ஒன்பது முப்பதை தொட்டது பள்ளியின் அருகே  ஒரு தொழிற்சாலையில் இருந்து சங்கு சத்தம் ஒலித்தது என்னடா இது பருட்சை எழுத்தருக்கு முன்னாடியே ரிசல்ட சொல்றானுகளே என்று சொல்லி மதுவும் அவனது நண்பர்களும் ஒருவரை ஒருவர் முகங்களை பார்த்து  சிரித்துக்கொண்டிருக்க, தமிழ் ஆசிரியர் பிரபு கேள்வித்தாள்களை பரிட்சையறைக்குள் எடுத்து வந்தார் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் அய்யா என்று சொல்லி அமர்ந்தனர், ஆசிரியர் பிரபுவை பார்த்ததும் அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக மதுவும் அவனது நண்பர்களுக்கும் மிகுந்த சந்தோசம், காரணம் பிரபு அமைதியான இடமொன்று கிடைத்தால் போதுமென்று சற்று இளைப்பாரிக்கொள்பவர் பரிட்சையறை அமைதியாக இருப்பதினால் அங்கும் அவர் தூங்குவதை வழக்கமாக கொண்டவர், எனவே அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர், பிரபு கணக்கு வினாத்தாள்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார், வினாத்தாளை வழங்கிவிட்டு யாரும் பிட் அடிக்கக்கூடாது மீறி பிட் அடுசீங்கன்னு தெருஞ்சுது பேப்பர கிளுச்சு வீசிட்டு வீட்டுக்கு அனுபுச்சுருவேன் பாத்துக்குங்க என்று ஏக வசனத்தை பேசி சிறிது நேரம் அங்குமிங்குமாய் பரிட்சையறையில் நடந்துவிட்டு ஆசிரியர்களுக்காக ஒதுகப்படிருந்த நாற்காலியில் அமர்ந்தார், மதுவின் கால்களில் கொசுக்கடிக்க சற்று குனிந்து சொரிந்துக்கொண்டன் மது , அதை பார்த்த பிரபு என்னவேணும் மது என்றார், ஒனுமில்லயா என்றான், என்ன என்ன சொன்ன சொல்லு என்றார் பிரபு, ஒன்றுமில்லை கொசு கடித்துவிட்டது அய்யா என்றேன் அய்யா என்றான் மது கிண்டலாக, பிரபுவும் நாற்காலியில் அமர்ந்தவாரே தூங்க ஆரம்பித்தார், பிரபு தூங்க ஆரம்பித்ததும் அஞ்சுவை பார்த்து தேர்ச்சியாகும் அளவிற்கு மட்டும் விடையளித்தான் மது, மதுவின் நண்பர்களாகிய மோகன்,நிஷா, அசோக்,அன்னபூரணி மற்றும் சசியும் அருகிலிருந்தவர்களை பார்த்து  நல்லதொரு மதிப்பெண் பெருமளவிற்கு எழுதினார்கள், மணி பன்னிரெண்டை தொட்டது பரிட்சைகான நேரம் முடிவடைந்ததும் விடைத்தாள்களை சேகரிக்க ஆரம்பித்தார் பிரபு விடைத்தாள்களை சமர்பித்துவிட்டு மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர் எதோ போரில் வெற்றி வாகை சூடிய  வீரர்களைப்போல,

  மதுவும் நண்பர்கள் மோகன்,நிஷா,அசோக்,அன்னபூரணி மற்றும் சசியும் வக்குப்பறையை விட்டு வெளியே செல்ல, நட்புகளே பருட்சை எப்புடி இருந்துச்சு? பயந்துட்டே இருந்தோம் ஆனா பாதீங்களா எவ்வளவு சப்பையா முடுஞ்சுபோசுன்னு அதான் எப்பவுமே பாசிட்டிவா திங்க் பன்னனுமுன்னு சொல்றது என்று மது பேச்சை தொடங்க ஆமாண்டா மாமா நா அறுபது மார்க் வாங்கிருவேன் போலடா அன்போட பேப்பர பாத்து நல்லா எழுதிருக்கேன்டா என்று மோகன் கூற நா பாஸ் ஆகுற அளவுக்குதாண்ட எழுதுனேன் நா நெறைய மார்க் வாங்குனேன்னா இவ எப்புடி இவ்வளவு மார்க் வாங்குனானு தேவையில்லாத சந்தேகம்தான்டா வரும் அதனாலதா என்று மதுக்கூற டேய் மது அப்ப தப்ப சரியா பன்னிட்டு வந்துருக்கேன்னு சொல்லுடா என்றான் அசோக், ஹா ஹா அரசியல்ல இது எல்லாம் சாதாரணம்டா அசோக் என்றுபேசிக்கொண்டே பேருந்து நிலையத்தை நோக்கி நடையை ஆரம்பிக்க மதுவின் முதுகில் செல்லமாய் ஒரு அடி விழுந்தது அது தன் மாமன் மகள் அஞ்சலியென்று திரும்பிப்பார்க்க அது மணிமேகலை, ஆச்சிரியத்தில் மது சத்தமாக அம்மா !! நீ எங்க இங்க என்றான் , டேய் கண்ணு உனக்கு என்னடா ஆச்சு எந்திரி அம்மா உனக்கு டீ கொண்டுவந்துருக்கேன் போய் பல்லு தேச்சுட்டு வந்து டீய குடுச்சுட்டு நல்லா படி, இங்கப்பாரு கால்ல கொசு எப்புடி கடுச்சுருக்குன்னு இது கூட தெரியாம அப்புடி என்னதான் தூக்கமோபோ என்று கூறிக்கொண்டு வாசலை சுத்தம் செய்ய கிளம்பினாள் மணிமேகலை,
   
   அப்ப நா கணக்கு பரிட்சை எழுதி முடுச்சுட்டு வந்தது எல்லாமே கனவா !! அய்யகோ கடவுளே என்னடா இது விளையாட்டு என் பரிட்சைக்கூட என்று புலம்பிக்கொண்டு கணக்கு புத்தகத்தை எடுத்தான், தேநீர் குடித்தவாறே கணக்கு குறிப்பெழுதிய புத்தகத்தையும் எடுத்து புரட்டி புரட்டிப்பார்த்தான் மது ஒன்றும் விளங்காமல் பள்ளிக்கு நேரமான நிலையில் இதமாய் குளித்துவிட்டு பதமாய் சிற்றுண்டியையும் முடித்துவிட்டு மா நா பள்ளி கூடத்துக்கு போயிட்டு வரேன் மா என்று மணிமேகலையிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டான் மது, பள்ளியின் விளையாட்டு திடலில் சிரித்து பேசிக்கொண்டிருந்த தன் நண்பர்கள் சரவணன் மற்றும் கிரிதரின் அருகே சென்ற மது, என்னடா சந்தோசமா சிருச்சு பேசிட்டு இருக்கீங்க, நல்லா படுச்சுட்டு வந்துடீங்க போல ராஸ்கல்ஸ் ம்ம் நடத்துங்கடா  நடத்துங்க என்று கூறிக்கொண்டே நண்பர்கள் படித்து வந்து விட்டார்களே என்று சற்று மன வேதனையுடன் தனது நண்பர்களான மோகன்,நிஷா  அசோக், அன்னபூரணி மற்றும் சசி ஆகியோரை நோக்கி வகுப்பறைக்கு சென்றான் மது....!!
-இரா.சுதர்சன்

Wednesday, 18 July 2012

கேட்டாயா,
பௌர்ணமி சந்திரனை  
ரசிக்காதே என்றேன் 
இப்பொழுது அவனும் 
என்னைப்போல தினம் தினம் 
உருகிக்கொண்டே போகிறான்....!!
-இரா.சுதர்சன் 
நல்லதம்பி.......
     
        இருபத்தி மூன்று வயது நல்லதம்பி தன் பெயருக்கு அப்படியே நேர்மாறான தம்பி இந்த நல்லதம்பி, மிகுந்தகோபம்,பிடிவாதம்,பொறுமையின்மை, தலைகணம் என்று தன்னைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகுமளவிற்கு மிகவும் நல்ல தம்பி.

        குடும்பத்தில் அவனது சித்தப்பா ராமசாமிக்கு மட்டும் சிறுவயது முதலே அவன் மேலான பாசமதிகம்  எனினினும் அவரை அவமானப்படுதிப்பார்ப்பதில் அலாதிப்ரியம் கொண்டவன் நல்லதம்பி.


       அது ஒரு வியாழன்கிழமை இரவு நேரம் அடைமழை பெய்துகொண்டிருக்க அலுவலகத்திலிருந்து புறப்பட்டான் நல்லதம்பி, சார் என்ன மழையிலேயே கிளம்பி போறீங்க என்று சக ஊழியரிடமிருந்து வினா எழும்ப அலுத்துக்கொண்டே மாமா பையனுக்கு நாளைக்கு கல்யாணம் வீட்ல இருந்து சும்மா வா வானு தொந்தரவு அதான் கிளம்பிட்டேன் சார் என்றான், சக ஊழியரோ என்ன நல்லதம்பி மாமா பையன் கல்யாண முன்னு சொல்ற கண்டிப்பா போகனுமாச்சே நீ என்னடானா இப்புடி அலுதுக்குறியே என கூற, நான் ஒன்னும் சின்னப்புள்ளை இல்ல சார் கிளாஸ் எடுக்க, சேரி சார் ந கிளம்புறேன் என்று கூறி அலுவலகத்திலிருந்து விடை பெற்று தனது உடைமைகளை சுமந்தபடி சென்னை பேருந்து நிலையத்தை நோக்கி  புறப்பட்டான் நல்லதம்பி,


       தனது நண்பனின் மூலமாக தனியார் பேருந்தில் மதுரைக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த நல்லதம்பி மலையின் காரணமாக வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டான்  தனது தொலைபேசி ஒலித்தது அழைப்பையேற்று ஹலோ என்று பேச துவங்கினான் மறுமுனையில் சார் நா அசோக் ட்ராவல்ஸ்ல இருந்து பேசுறேன் சார் பஸ் இன்னும் பத்து நிமிசத்துல கிளம்பபோகுது கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லது சார் என்று கூற  ஓகே ஓகே நான் வந்தறேன் என்று கூறி அழைப்பை துண்டிக்க வீட்டிலிருந்து ராமசாமியும் தம்பி எங்கப்பா இருக்க சீக்கிரம் வா, உன்னை எல்லாரும் ரொம்ப எதிர்ப்பாதுட்டு  இருக்கோம் என்று கூற நெரிசலின்மேல் இருந்த கோவத்தை வேகமாக ராமசாமியிடம் காட்டினான் நல்லதம்பி, பத்து நிமிடத்திற்க்குப்பிறகு மீண்டும் கைப்பேசி ஒலித்தது ஹலோ என்று நல்லதம்பி ஆரம்பிக்க சார் நா அசோக் ட்ராவல்ஸ்ல இருந்து பேசுறேன் சார் பஸ் இப்ப  கிளம்பபோகுது சார் உங்க ஒருத்தருக்கு வேண்டி வெயிட் பண்ண முடியாது சார் உங்க டிக்கெட்ட வேற ஒருத்தருக்கு தந்துடோம் என்று கூறி தொடர்பை துண்டித்தார், ஒரு வழியாய் சென்னை மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த நல்லதம்பி பஸ் கிடைக்குமோ கிடைக்காதோ என்று புலம்பிக்கொண்டிருக்க மதுரைக்கு புறப்பட தயாராய் இருந்த பேருந்தை கண்டு சற்றே நிம்மதியடைந்தான் நல்லதம்பி.

              பேருந்தில் ஏறிய நல்லதம்பி ஆயிரம் ரூபாய் தாளை நீட்டியவாறே ஹலோ மதுரைக்கு ஒரு டிக்கெட் குடுப்பா என்றான் நடத்துனரிடம், என்னடா இவ  தம்மாதூண்டு இருந்துட்டு இப்புடி  பேசுரானே என்று புலம்பியவரே என்ன என்று வினவினார் நடத்துனர் மதுரைக்கு ஒரு டிக்கெட் என்றான், ஆயிர ரூபாய நீட்ற நா என்ன  சில்லரைய அச்சா அடிக்கறேன் சில்ற இருந்த குடுப்பா இல்லனா இறங்கி போய் சில் மாத்திட்டு வா என்று முகத்தில் அடித்தவாறு கூறி  நல்லதம்பியை முறைதுக்கொண்டர் நடத்துனர்.  


             சட்டேன்று பேருந்திலிருந்து இறங்கிய நல்லதம்பி அருகே இருந்த பூக்கடையில்  சில்லரை கேட்க ஆயிர ரூபாய்கு என்கிட்ட சேஞ் இல்லபா, கொஞ்ச அபுடீக வெளிய போன ஓயின் ஷாப் இருக்கு அங்க கேளு கேடைக்கு என்று கூற அருகே இருந்த மதுபாண கடைக்கு  சென்று அண்ணா ஆயிரம் ரூபாய்கு சேஞ் இருந்தா தாங்க நா என்று உரத்த குரலில் கூறிக்கொண்டே கூடத்தில் முந்தி அடித்து சென்றான் நல்லதம்பி, அங்கிருந்த ஊழியர் ஒருவர் கூட்டமா இருக்கும்போது தா சேஞ் வேணும் அது வேணும் இது வேணுமுன்னு வந்து நிப்பீங்களே ஓரமா நில்லு கூட்ட கொரயட்டு தரேன் என்றார், பேருந்து புறப்பட தயாராய் இருக்க அருகில் இருந்த உணவகத்தில் நல்லதம்பிக்கு சில்லரை கிடைக்க சற்று ஆறுதலாய் பேருந்தில் அமர்ந்து பயண சீட்டை வாங்கிக்கொண்டு நடத்துனரிடம் சார் பஸ் எப்ப மதுரைக்கு போய் ரீச் ஆகும் என்றான் எட்ற மணி நேரம் ஆகும் என்று கூற எப்படியோ தாலி கட்றதுக்கு முன்னாடி ரீச் ஆயிடலாம் என எனிக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தான், பயணத்தின் நடுவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து நின்றுவிட நல்லதம்பியின் நாடி வேகமாக துடிக்க ஆரம்பித்தது, ஒரு வழியாக கோளாறு சரிசெய்யப்பட்டு பேருந்து மீண்டும் கிளம்ப கடவுளே என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டான்,


                பேருந்து மதுரை வந்தடைந்தது நல்லதம்பி அவசர அவசரமாக அருகே இருந்த திருமண மண்டபத்தை சென்றடைந்தான்  உடை ஏதும் மாற்றாமல் பற்களை துலக்கிவிட்டு முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு மணமேடையை நோக்கி சென்றான், நல்லதம்பியை கண்ட ராமசாமிக்கு அளவில்லா ஆனந்தம் ,ஏம்பா  லேட் ஆய்டுச்ச பரவல விடு கலச்சுப்போய் வந்துருப்ப முதல் நீ போய் டீ சாப்டுட்டு வா தம்பி என்று கூறக்கூற எதிர்ப்பாரா விதமாய்  நல்லதம்பியின் தந்தை முத்துப்பாண்டி நல்லதம்பியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை  வைத்தார் நடுனடுங்கிப்போனான் நல்லதம்பி இப்ப என்ன எதுக்கு நீங்க அடுசீங்க என்று கேட்க்க மீண்டும் ஒருமுறை அரைய  சென்ற பாண்டியை ராமசாமி தடுத்து நிறுத்தி தம்பி இப்ப என்ன பன்னிட்டானு அடிக்ககறீங்க என்று கேட்டார் இவன் பன்னிருக்க காரியத்த பாரு என்று நல்லதம்பியின் முதுகை திருப்பி காண்பித்தான் பாண்டி, சற்று புருவத்தை உயர்த்தி ஆச்சர்யத்துடன் அவன் சட்டையில் ஒட்டியிருந்த மதுபாண மூடியில் ஒட்டியிருக்கும்  மினுமினுப்பான சீட்டைப்பார்த்து சற்றே வாயடைதுப்போனான் ராமசாமி, நல்லதம்பியின் உறவினர்கள் அவனோட கண்ண பாரு  தண்ணி அடுசுருந்தாலும் அடுசுருப்பன் இவ இப்புடி செய்யற ஆளுதான் என்று ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தபடி பேச தான்  குற்றமற்றவன் என்று  நிருபிக்க அவனால் இயலவில்லை பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை இவர்கள் பேசப்பேச நல்லதம்பியின் பிடிவாதம் பொறுமையிழந்து கோவம்  தலைகேறி நிற்க, ராமசாமி அனைவரயும் திட்டிவிட்டு நல்லதம்பியை தனியே அழைத்து சென்று பிடிவாதம் பன்னாத கோவத்த கன்ட்ரோல் பண்ணு  பொறுமயா என்ன  நடந்துச்சுன்னு சொல்லு என்றார் நல்லதம்பி நடந்ததை கூற உறவினர்கள் அதை ஏற்க்க மறுத்தனர் காரணம் சிறு வயதிலிருந்து அவனது கோவம் பொறுமையின்மை குறும்புத்தனம் பிடிவாதம் என அடிக்கிக்கொண்டே போகலாம், இதை அனைத்தையும் எடுத்துரைத்த ராமசாமியின் வார்த்தைகளை முதற்முறையாக பொறுமையுடன் காது கொடுத்து கேட்டான் நல்லதம்பி, பின்னர் நல்லதம்பியையும் அவனது உறவினர்களையும் சமாதானப்படுத்தினார் ராமசாமி, யாரும் தன்னை புரிந்துகொள்ளத நேரத்தில் தான் கூறிய உண்மைகளை பொறுமையாய் கேட்டு தன்னை புரிந்துகொண்டு தன்னையும் புரியவைத்த ராமசாமியை கண்களில் நீர் மல்க மல்க கட்டியனைதுக்கொண்டான் மனதில் தான் ராமசாமியை கடிந்துகொண்டதையும் எண்ணி....!!

-இரா.சுதர்சன்

Tuesday, 17 July 2012

மின்சாரமில்லா ஒளியாம்
உன் கண்களைக்கொண்டு..
பூவில்லா தேனாம் 
உன் இதழ்களை எடுத்துவா..
பசியில் காத்திருக்கிறேன்..!
இருட்டறையாம் தனிமையில்....!!
-இரா.சுதர்சன்  

பனிமலையும்
பாறைதான்..!
பகலவனிடம்
காதல் கொள்ளாதவரை....!!
-இரா.சுதர்சன் 
பெண்னே..
உனை காணும்போதெல்லாம் 
உன்னில் சிற்ப்பியாக 
என் காதல் சிலை 
வடிக்கவே நினைக்கிறது..!
ஒரு வேலை உன் இதயம் 
கல்லாய் இருப்பதாலோ என்னவோ....!!
-இரா.சுதர்சன் 

Thursday, 12 July 2012

அவன் பின்னால் அலைந்து
முகவரியை இழந்த எனக்கு
அவனால் கிடைத்த முகவரி
என் கன்னத்தில்..!
அவன் இரு வரி இதழ் 
முத்தமாக....!!
- இரா.சுதர்சன் 

Wednesday, 11 July 2012

தேவன் அடியார்களின்
பிள்ளைகள் போலப்பண்
ணீக்கள் பாசமாம்
பணத்தின் மீதேறி
பிறப்பை பிணமாக்கிக்காகித
குவியலை யாருக்கடைக்கிறாய்
அலிக்கவந்தவனே நீயலிந்தப்பின்
பதுகியப்பொருளனைத்தும் உனை
உயிர்ப்பிக்குமா இல்லை
உலகாலவைக்குமாவே
சிப்பெற்ற பிண்டுகளே
புனிதமென்று போர்வைப்போற்றி 
பணம் தின்ன பிணமாக்கும் பீடைகளே
பிறந்த நீயும் ஓர்நாள் பிரிவாய்
பாசமெனும் பணத்தை விட்டுப்புரிந்துகொள்..!!
-இரா.சுதர்சன்

Sunday, 8 July 2012

வருந்துகின்றேன்..
ஒரு முறையல்ல பலமுறை,,
ஆசை ஆசையாய்
அள்ளி அள்ளிப்பருகி
உடல் முழுவதுமாய் ஊறிப்போய்
போதையேறி  காற்றில் மிதந்தேன்
பல வருடமாய்..
நொடிப்பொழுதில்
நோக்கமின்றி உடைந்தது..
என் கையிலிருந்த 
மது அடைத்த
கண்ணாடி குடுவையல்ல..!
என் கள்ளமில்லா காதலும் அதை
அடைத்துவைத்திருந்த
என் இதயமும்....!!
-இரா.சுதர்சன்
மீண்டும் காதலிக்க துணிந்துவிட்டேன்..!
தோற்ற என் காதலின்
நீங்க நினைவுகளாம் 
வலி வேதனைகளை....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 3 July 2012

உனை நினைக்கும்பொழுது
கண்கள்மட்டுமல்ல
என் எழுதுகோலும் கூட வடிக்கிறது..!
கண்ணீர்க்கவிதைகளை....!!
-இரா.சுதர்சன்

Thursday, 28 June 2012

திருடனை
கூட்டினிலடைத்தேன்
ஏசுகிறது உறவுகள்.!
இதயத்திருடனை
என் இதயக்கூட்டிற்குள்....!!
-இரா.சுதர்சன் 
உனை மறக்க நினைக்கிறேன்..!
ஆனால் உனை
நினைத்து மறப்பதையும்
மறந்துவிடுகிறேன்....!!
-இரா.சுதர்சன்  
நிழலலித்தான்
நிழலைத்தேடுகிறான்..!
மரவெட்டி....!!
-இரா.சுதர்சன் 

Wednesday, 27 June 2012

ஆபத்தென அறிந்தும்  
பாம்பிற்கு பால்
வார்ப்பது போலத்தான்..!
இந்தக்காதலும்....!!
-இரா.சுதர்சன் 

கண்ணீரில்
கரைகிறது காகிதம்..!
கவிதையாம் காதலின் 
களியாட்டத்தில்....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 26 June 2012

ஓயாமல் உழைத்தப்பின்
உழைக்க ஆரம்பிக்கும் 
பெருமூச்சு..!
நிம்மதி....!!
-இரா.சுதர்சன்
எங்கோ இருக்கும்
யாரையோ நினைக்கும் நீ 
உனதருகிலிருக்கும்
எனை ஏன் மறந்தாயடி..!
எனக்கான நினைவுகள்
உன்னில் விக்கலாய்....!!
-இரா.சுதர்சன் 

Monday, 25 June 2012

மாற்றான் மனைவிக்கோர்
மாடமாளிகை
மனிதனை முடமாக்கி 
மரணத்தையுமல்கி..! 
ஞாலம் போற்றும் 
காதல் சின்னமாம்....!!
-இரா.சுதர்சன்

Sunday, 24 June 2012

வாழ்நாள் குறைவு
மேலும் குறைக்கிறான்..!
கல்லறை வ(லி)ழியாம்
கசந்த காதலில்....!!
-இரா.சுதர்சன்
என் இதயமும்
எனை ஏமாற்றிவிட்டது..!
எனக்காக துடிக்காமல்
உனது பிரிவிற்க்காக....!!
-இரா.சுதர்சன்

Saturday, 23 June 2012

வெட்ட வெட்ட வளரும்
வாழை கன்றைப்போல
என் காதலும்..!
நீ வெறுக்க வெறுக்க
வேரூன்றிப்போகிறது....!!
-இரா.சுதர்சன் 

Thursday, 21 June 2012

வெள்ளை மனசுக்காரர்களை
கருப்பாய் வடித்தால் விடுவோமா,
வெள்ளையாக்குகிறோம்
வேடிக்கைப்பாருங்கள்..!
பரவசத்தில் பறவைகள்....!!
-இரா.சுதர்சன்  

Friday, 15 June 2012

இலக்கணம் இலக்கியம்
எதுகை மோனை
சொல் பொருள்
ஏதுமறியா எனக்கு - உன்
கடைக்கண் பார்வைப்பட்டதும்
இதயம் படபடக்க
ஏதோ என் கைகள் கிறுக்க
கவிதையாய் அள்ளித்தெளிக்கிறது
என் மனது....!!
-இரா.சுதர்சன்  

Wednesday, 13 June 2012

அவளால் திருடப்பட்டு
சிறையில் வைத்த
என் இதயத்தை,
பொருளேதும் அறியாமல்
விடுதலை செய்துவிட்டாள்..!
இதயமில்லாது
இனிமையாய் வாழ்ந்தேன்
இன்றோ இதயமிருந்தும்
இயற்க்கை எய்துகிறேன்....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 12 June 2012

மேகமே
நீ நீலிக்கண்ணீர் வடிக்க
மக்கள் சிரித்தனர்
பூமித்தாய் சிரிக்க
கோவம் கொள்கிறார்கள்..!
மானுட மாற்றங்கள்...!!
-இரா.சுதர்சன் 
பைத்தியக்காரன்..!
உன்மேல்
நான் கொண்ட காதலில்
உன்னிடம் நான்
என் தனிமையில் பேசும்போது
மனிதர்கள் எனக்கு
பார்த்தளித்தப்பட்டம்....!!
-இரா.சுதர்சன்

Thursday, 7 June 2012

உயிர் மட்டுமல்ல
உலகமே இருளாய் இருக்கும்..!
வெற்றிப்பெற்று தோற்க்கும் பொழுது
இந்தக்காதலில்....!
-இரா.சுதர்சன்

Wednesday, 6 June 2012

மழைத்துளி..!
துளித்துளியாய்
என்னை
நனைத்தாலும் சரிதான்
அது உன்
முத்தங்களாக இருப்பின்....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 5 June 2012

கனவுகள்..!
இலட்சியங்கள்
மெய்ப்பட 
காரணகர்த்தா....!!
-இரா.சுதர்சன் 

Monday, 28 May 2012

மாறிவிட்டான் மனிதனாக..!
ஆனால் மனம் மட்டும்
இன்றளவும் குரங்கைப்போல
அங்குமிங்குமாய்....!!
-இரா.சுதர்சன் 
 நினைவுகள் நீங்குவதில்லை
முடிவுவரை
முதற்முறையில்
ஒருமுறையாயினும்
ஓட்டத்தின் இறுதிவரை..!
காதல் தோல்வி....!!
-இரா.சுதர்சன்  
என் கவிதைகள் 
பூர்த்தியடைவதில்லை..!
இறுதியில் 
உன் பெயராம் 
என் புனைப்பெயரை இடாமல்..!!
-இரா.சுதர்சன்  

Thursday, 24 May 2012

கேணி தொட்ட  தண்ணீரை விட
உன் மேனி தொட்ட தண்ணீருக்கு
சுவை அதிகமடி....!!
- இரா.சுதர்சன்

Wednesday, 23 May 2012

எளிமையானவர்..!
பெரிய வீட்டை
வைத்துக்கொண்டு
வாசம்செய்கிறார்
அதிகமாக
சிறிய வீட்டிற்க்கு....!!
-இரா.சுதர்சன் 
அன்றோ விஞ்ஞானி
புதிய படைப்புகள் 
புதிய முயற்சிகளுக்கு..!
இன்றோ பைத்தியக்காரன்....!!
-இரா.சுதர்சன் 

Monday, 21 May 2012

பார்வை
பறிமாற்றம்..
காதல்
சந்தேகம்..
கவலை
கண்ணீர்..
கவிதை
கல்லறை..!
காதலின் கதை....!!
-இரா.சுதர்சன்  

Sunday, 20 May 2012

கணக்கில்லா காதல் கொண்டேன் 
பகிராமல் பற்றிக்கொண்டாள்  
சுவாசமின்றி சுருண்டுக்கிடந்தேன் 
சுகமான சுவாசமாய் 
உயிரோட்டம் பெற்றுத்தந்தாள் 
இருட்டறையாம் 
கருவறை சிம்மாசனத்தில் 
கடவுளாய் குடியேற்றினாள்   
எனக்காக துடித்த
என் முதல் இதயமாய் 
இனிய அம்மா....!!
-இரா.சுதர்சன்  

Friday, 18 May 2012

கண்கள் பார்த்து
புன்னகைப்பூ பூத்து
இமைகளை 
இறுக்கமாய் மூடி 
இதயம் இடறி
மனது மயங்கி
கைகள் கசக்கி
கால்களால் கோலம்..!
வெட்கமாம்....!!
-இரா.சுதர்சன் 
பார்த்து.. 
பாதியோடு பறிப்போகும் 
வாழ்க்கைப்பயணம்..!
இனி வேண்டாம் 
படியில் பயணம்....!!
-இரா.சுதர்சன் 

Wednesday, 16 May 2012

நான் கவிதை எழுத
காகிதம் கூட தூய்மையாகவே உள்ளது..!
உன் தூய எண்ணத்திற்கு
கவிதை எனும் உயிர் தந்து
அலங்கரிக்க எண்ணி....!!
-இரா.சுதர்சன் 
காதலுக்காக கவிதை
எழுதி எழுதி என் 
கைகள் மட்டுமல்ல 
மனதும் காய்ந்துவிட்டது..!
உன்னை மறப்பது போல 
இனி இந்தக்கவிதையையும்....!!
-இரா.சுதர்சன் 

Sunday, 13 May 2012

நம்மில் பாதியாம் நட்பு அதற்க்கு
நாடறிய நன்றிகள் எதற்க்கு..?
புன்னகைப்பூவொன்று போதுமாம்
பூலோகம் முழுவதுமாய்
பூத்துக்குலிங்கிடும் நட்பு....!!
-இரா.சுதர்சன் 
கருவறை
கற்சிலைகள்
கடவுள் இல்லை..!
உன்னை
கருவறையில்
சுமந்த  
அன்னை மட்டுமே....!!
-இரா.சுதர்சன்

Friday, 11 May 2012

தலையேறா தாமரை..!
முதிர்க்கன்னி....!!
-இரா.சுதர்சன்

Thursday, 10 May 2012

உன் விழி
அம்பு கொண்டு எய்ததினால்
என் இதயம்
காயமடைந்துள்ளது..!
காதலெனும் பெயரில்....!!
-இரா.சுதர்சன் 
காதலுக்காக 
எதையும் செய்ய 
துணிந்த நான்..!
காதலுக்காக 
காதலை 
துறந்த நிலையில்....!!
-இரா.சுதர்சன்  

Sunday, 6 May 2012

சில்லறை சத்த சிரிப்புடன் 
பொக்கைவாய் பாட்டி..!
கையில் பிட்சைப்பாத்திரம்....!!
-இரா.சுதர்சன் 

Sunday, 29 April 2012

வகுப்பறையில் பாடம் நடத்தியது 
அவளது இமைகள் 
பட்டாம்பூச்சிகள் படபடக்க....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 17 April 2012

உன்
கையில் பட்டு தப்பித்தது
இந்த காகிதப்பூ
என்னைப்போல் வாடாமல்....!!
-இரா.சுதர்சன் 

Friday, 13 April 2012

இப்படியுமா !! ( சிறுகதை ) :

       அது ஒரு வெள்ளிக்கிழமை அழகான அதிகாலை நேரம் ஊர் முழுக்க மழை பெய்து ஓயிந்திருந்த மிக அமைதியான நேரத்தில் பறவைகள் ரம்மியமான சத்தத்துடன் சந்தோசமாக தனது கூடுகளை விட்டு வெளியே வர மது மட்டும் சோகத்துடன், பணியின் காரணமாக அலுவலகத்திற்கு கிளம்பினான், வீட்டு வாசலருகே வந்ததும் நா போய்ட்டு வரேன் என்று கூறினான் தன் மனைவியிடமிருந்து பதில்வராத நிலையில் கோபத்துடன் நா போய்ட்டு வரேன்னு சொன்னேன் காது கேட்குதா இல்லையா ? என்று கூற பாத்திரம் உருளும் சத்தம் கேட்ட மது எதுவும் பேசாமல் இடத்தை காலி செய்தான்,

  அலுவலகத்தில் மதுவின் நண்பர்கள் ஏன்டா ஒரு மாதிரியா இருக்க உன் மூஞ்சி எப்பவும் போல இல்லையேட மது என்னாச்சுடா என்று வீனவ, சிறு புன்னகையுடன் ஒண்ணுமில்ல நேத்து மழை பேஞ்சுதுள்ள இடி சத்தம் சாதாரணமாவே கரண்ட் இருக்கறதில்ல நேத்து மழை வேற சொல்லவா வேணும் அதான் சரியா தூக்கமில்லாம கொஞ்ச டயர்டா இறுக்கு மத்தபடி வேற ஒண்ணுமில்லடா என்று வாய் கூற மதுவின் மனமோ அதற்க்கு முன்தின இரவை நோக்கி சென்றது....

          அடை மழை பெய்து கொண்டிருந்த வேலை அது,  விடாது பெய்துக்கொண்டிருந்த  மழை போல விடாது பேச்சை தொடர்ந்து கொண்டே இருந்தாள்  மதுவின் காதலித்து கைக்கோர்த்த மனைவி இடியின் சத்தத்தை காட்டிலும் அவன் மனைவியின் சத்தம் மிக அதிகமாகவே இருந்தது,

காரணம் சரிவர அண்ணனை பார்க்க முடியல கடைக்கு கூட்டிட்டு போங்கணு ஒரு வாரமா கேட்டுகிட்டே இருக்கேன் ஆனா நீங்க பதிலே சொல்ல மட்டேன்குறீங்க என்று கூறிக்கொண்டிருந்தால்,  அவளது அண்ணன் இவர்கள்   வசித்து வந்த இடத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் ஒரு வாகன உதிரி பாகக்கடை நடத்தி வருகிறார்,

  இதற்க்கிடையே மதுவின் மனைவி நாளைக்கு நம்ம கடைக்கு போறோம் நேரத்துல வராம இருந்து பாருங்க அப்புறம் என்ன நடக்குதுன்னு தெரியும் என்று பயம் காட்ட அலுவலக பணியை முடிக்காமலே அவசர அவசரமாய் தனது காதல் மனைவியின் கோபத்தை குறைக்க வீட்டை நோக்கி புறப்பட்டான் மது ,

   மதுவின் நேரம் வழி நெடுக சாலை நெரிசலில் சிக்கி வீடு சென்றடைய கால தாமதமானது தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்து விட்டு வீட்டினுள் நுழைந்த மது அதிர்ச்சி அடைந்தான், காலையில் தான் புறப்படும் போது திறந்து வைத்த வீட்டின் கதவு அப்படியே இருக்க வீடு பெருக்காமல் அறை முழுவதும் தூசியாகவும் சமையல் பாத்திரங்கள், வீட்டு  உபயோகப்பொருட்கள் என ஆனைத்தும் அறை முழுக்க அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடக்க படுக்கை அறை மட்டும் உள்பக்கமாக தாளிட்டிருந்ததை தெரிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தான்,

   அறையை திறக்க முயற்சித்த மதுவிர்க்கோ ஏமாற்றம்  தான் மிஞ்சியது தன் காதல் மனைவி பிரிந்த சோகத்தில் மனுச்சுக்கோம டிராபிக்ல வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு அதுக்குப்போய் இந்த மாதிரி  முடிவேடுத்துட்டியேம என கண்ணீர் மல்க புலம்ப ஆரம்பித்தான் திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதைத்திரும்பிப்பார்க்க அதிர்ச்சியானான் மது,

   அது அவனின் மனைவி, மனைவியை கண்டு சந்தோஷத்தில் என்ன காரியம் பண்ணுன என்று கேட்க்க கொஞ்ச அசந்து தூங்கிட்டேன் அதுக்கு ஏன் இப்புடி பொலம்பி தள்ளிட்டு இருக்கீங்க என்றால் சாதரணமாக,
        மதுவோ சரி சீக்கிரம் கிளம்பு உங்க அண்ணன் கடைய அடச்சுட்டு போயரப்போறாரு அதுக்குள்ள அவர பாத்துட்டு வந்தறலாம் என்றான்,

   ஆச்சிரியத்துடன் அண்ணனோட கடைக்கா ? எதுக்கு என்றால் மதுவின் மனைவி, எதுக்கா நீ தாணு ஒரு வாரம அண்ணன சரியா பாக்க முடியல கடைகுப்போகனுமுனு சொன்ன என்று கூறக்கூற மதுவிர்க்கோ மிகப்பெரிய அதிர்ச்சி மனைவியின் பதிலைக்கேட்டு,

      நா சொன்னது என்னோட அண்ணன் இல்ல டிவில வர மெகா சீரியல் அண்ணன சொன்னேன் இப்பெல்லாம் கரண்டில்லாம சீரியல சரியா பார்க்க  முடியறதில்ல  அதான் கடைக்குப்போய் நல்லதா ஒரு இன்வர்டர் வாங்கிட்டு வந்தரலானு தா உங்கள கூப்டுட்டே இருந்தேன் என்றுக்கூற மிகுந்த கோபமடைந்த மது முதல் முறையாக தனது மனைவியின் கண்ணங்களை தனது கை பதம் பார்க்க அதிர்ந்துபோய் உறைந்து நின்றாள் மதுவின் மனைவி.
 - இரா.சுதர்சன் 

Monday, 9 April 2012

மனிதர்கள் கல்லை வடித்து கடவுள் என்கிறார்கள்..!
பைத்தியக்காரர்கள் 
அவர்களும் கடவுள் தானே 
கல்நெஞ்சக்காரர்கள்....!! 
- இரா.சுதர்சன் 

Saturday, 7 April 2012

விழிப்புடன் ( சிறுகதை ) :

                          அது ஒரு வெள்ளிக்கிழமை மிக ரம்மியமான அந்திமாலை நேரத்தில் அவசர அவசரமாக தனது அலுவலக பணியை முடித்துவிட்டு தான் தங்கியிருக்கும் அலுவலக விடுதியை நோக்கி புறப்பட்டான் மது,  அறைக்கு சென்றடைந்ததும் அறையிலிருந்த அழுக்கு துணிகளையெல்லாம் எடுத்து ஒரு பையில் போட்டு மூட்டைக்கட்டினான் ,  பின் இதமாய் ஒரு குளியலை முடித்துவிட்டு மிடுக்கான உடை முக மற்றும் சிகை அலங்காரம், உணவு என ஒரு வழியாக அனைத்தையும் முடித்துவிட்டு குடிப்பதற்கு பாட்டிலில் சிறிது வெந்நீரையும்  எடுத்துக்கொண்டு  அருகில் இருக்கும் ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டான், ரயில் நிலையம் சென்றடைந்ததும் நடைமேடை அருகே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான் அப்போது ஒலிப்பெருக்கி கணிணியின் குரல் ஒலித்தது மது செல்ல வேண்டிய ரயில் ஒருமணி நேரம் தாமதமாக வரும் என்று எதிர்பார்கப்படுகின்றது என்று கூற மதுவின் முகத்தில் சிறிய கோபம்,  கோபத்துடன் அமர்ந்திருந்தவனிடம் கிழிந்த சட்டையுடன் ஒரு முதியவர் வந்து சாப்புட்டு ரெண்டு நாளாச்சு காசு தந்து தர்மம் பண்ணுங்க சாமி என்று கூற பரிதாபப்பட்ட மது வாங்க என்று அருகிலிருந்த சிற்றுண்டி கடையை காண்பித்து வாங்க அங்க சாப்பாடு வாங்கித்தரேன் என்றான் அதற்க்கு அம்முதியவரோ உங்களுக்கு எதுக்கு சிரமம் காசு குடுங்க சாமி நா வாங்கி சாப்டுக்குறேன் என்றான் அதற்க்கு மதுவோ சற்று கோவமாக காசெல்லாம் குடுக்க முடியாது கடைக்கு வந்த சாப்பாடு வங்கி தரேன் என்று கூற முதியவரோ முனுமுனுத்துக்கொண்டே அங்கிருந்து சென்றார் மதுவின் மனதிலோ சிறிய குற்ற உணர்ச்சி தவறு செய்துவிட்டோமோ,என்று சிறிது நேரம் கழித்து அதே முதுயவர் மதுவிடம் வர மது அவரை மேலும்கீளுமாக பார்த்தான் அப்போது அந்த முதியவர் சாராய வாடை வீச மதுவிடம் பேச ஆரம்பித்தார் சாமி சாப்பாடு வாங்கி தரேன்னு சொன்னியே இப்ப வாங்கி தா என்றார்  மது முதியவரிடம் பேச ஆரம்பிக்கும் போது திடீரென்று அந்த முதியவர் அந்த இடத்தை காலி செய்ய ஒரு போலீஸ்காரர் மதுவிடம் என்ன அந்தாளு உங்கிட்ட காசு கேட்டனா என்று கேட்க்க ஆமாம் என்று பதிலளித்தான் மது, அந்த ராஸ்கலுக்கு எல்லார்கிட்டயும் காசு வாங்கி தண்ணி அடிக்கறது தான் வேலையே , மறுபடியும் வந்து காசு கீசு கேட்ட குடுத்துராதீங்க என்று கூறி எங்க போகணும் என்று கேட்க மதுவும் ஊர் பெயரை சொல்ல அங்கிருந்து போலீஸ்க்காரர் நகரத்தான் மதுவிற்கு தெரியவந்தது தான் முன்பதிவு செய்திருந்த பயணசீட்டை அறையிலேயே மறந்து வைத்துவிட்டோமென்று, மீண்டும் தான் தங்கியருந்த அறைக்கு வந்து பயணசீட்டை எடுத்துக்கொண்டு மூச்சு வாங்க ஓட்டம் பிடித்து ரயில்நிலையம் சென்றடைவதர்க்கும் மது செல்ல வேண்டிய ரயில் மேடைக்கு வரவும் சரியாக இருக்க பதட்டத்துடன் ரயிலில் ஏறி தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து சிறிது இளைப்பாறிவிட்டு கைபேசி மூலமாக வீடிற்கு தொடர்புகொண்டான், அம்மா ந ட்ரைன்ல ஏறி உக்காந்துட்டேன் என்று கூற அம்மாவோ சாப்டியா தங்கோ  என்று கேட்க ந ரூம்ல சாப்டுட்டுத்தா வந்தேன் மா நா நாளைக்கு காலைல நேரமாவே வந்துடுவேன் மா நீங்க சாப்டுட்டு தூங்குங்க என்று கூற சரிப்பா  உன்ன பிக்அப் பண்ண அண்ணன ஸ்டேஷனுக்கு அனுப்பிவக்கிறேன் நீ பாத்து பத்தரம வா என்றல் மதுவும் சரிமா வந்தறேன் குட்நைட் என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு ரயில் ஒலிபெருக்கிக்கொண்டே நகர ஆரம்பிக்க  ஜன்னல் வழி வேடிக்கைப்பார்த்தபடியே தூங்க ஆரம்பித்தான் மது, அதிகாலை நேரம் மது ஆழந்த உறக்கத்தில் இருக்க கைபேசியின் மணி ஒலித்தது  தூக்க கலக்கத்தில் தனது அண்ணனின்  அழைப்பை ஏற்ற மதுவிடம் எந்த இடத்துக்கிட்ட வந்துட்டு இருக்க என்றான் மதுவோ ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்துவிட்டு கிளம்பி வாடா இன்னும் அரைமணி நேரத்துல ட்ரைன் ஸ்டேஷன ரீச் ஆயிடும் என்று கூற மறுமுனையிலிருந்து மதுவின் அண்ணன் சரி  ரீச் ஆனதும் கூப்புடு டா என்று சொல்ல சரி என்று சொல்லி தொடர்பை துண்டித்தான் மது , அதிகாலையில் சில்லென்ற காற்றை அனுபவித்த வாரே மீண்டும் தூங்க ஆரம்பித்தான், தொடர்வண்டி நிலையத்தை அடைய சல சலப்பை கேட்டு துயிலெழுந்து அவசர அவசரமாக தன் பையை தூக்கிக்கொண்டு ரயிலை விட்டு இறங்கினான், வெகு நாட்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள மகிழ்ச்சியிலிருந்த மது தனது அண்ணனுக்கு கைப்பேசி மூலமாக தொடர்புக்கொண்டு நா ஸ்டேஷன் வந்து ரீச் ஆகிட்டேன் நீ எங்க டா வந்துட்டு இருக்க என்று கேள்வி எழுப்பினான் குறும்புகார மது மறுமுனையிலிருந்து வந்துட்டே இருக்கேன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடா என்று கூற சரி சீக்கிரமா வா என்று கூறி தொடர்பை துண்டித்துவிட்டு ஊருக்கு வந்தடைந்த சந்தோஷத்தில் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தான் மது, பறவைகளின் சத்தத்தில் சில்லென்ற காற்றுக்கு இதமாக தேநீர் பருக அவன் மறுத்தாலும் அவன் கால்கள் இழுத்து சென்றது பேருந்து  நிலையத்தின் அருகே இருத்த ஒரு தேநீர் விடுதிக்கு, வெகு நாட்கள் கழித்து தேநீர் விடுதியில் நுழைந்த மது அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்  அண்ணா ஒரு டீ என்று கூறிவிட்டு மேஜை மேல் வைத்திருந்த நாளேடை புரட்ட ஆரம்பித்தான் சார் இந்தாங்க டீ என்று மேஜையின்மேல் தேநீரை வைத்தார் அங்கிருந்த ஒரு வேலையாள், சில்லுனு காத்து  சூடான டீ வாவ் வாவ் என்று தனக்குள் முனுமுனுத்துக்கொண்டே தேநீரை பருகிவிட்டு அண்ணா ஒரு டீ என்று கூறி பத்து ரூபாயை நீட்ட அவரிடமிருந்து மீத இரண்டு  ரூபாயை பெற்றுக்கொண்டு விலைவாசி எங்கயோ போயிட்டு இருக்குது போல ம்  எதிர்காலத்துல என்ன ஆக போகுதோ என்று புலம்பியவாரே கைபேசி எடுத்து தன் அண்ணனுக்கு மீண்டும் அழைத்தான் மது, அண்ணனிடமிருந்து பதிலேதுமில்லை மறுமுறை அழைக்க மதுவின் அண்ணனோ அஞ்சே நிமிஷம் வந்தறேன் நீ எங்க வெயிட் பண்ற என்று கேட்க்க, நா பஸ் ஸ்டாண்ட் கிட்ட வெயிட் பண்றேன் சீக்கிரமா வாடா என்று கூற மதுவின் அண்ணன் சரி அங்கேயே வெயிட் பண்ணு நா வந்துட்டேயிருக்கேன் என்றான் சற்றே கோவத்துடன் ம் சரி சீக்கிரமா வா என்று கூறி தொடர்பை துண்டித்தான் மது , பேருந்து நிலையத்தில் அமர்ந்துக்கொண்டு வந்து சென்றுக்கொண்டிருந்த பேருந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அப்போது அங்கே ஒரு பெண்மணியின் உரத்த குரல் கேட்டு அங்கு தன் தலையை திருப்பிப்பார்த்தான் மது அதிகாலை வேளையில் அகர்பத்தி பற்ற வைத்து புகை மணமணக்க மங்களகரமாக முகத்தில் மஞ்சள் பூசி நெற்றி நிறைய விபுதி, நெற்றியின் நடுவே சிவப்பு பவுர்ணமி போல குங்குமமும் இட்டு ஒரு பெட்டியும் கையுமாய் பேருந்து நிலையத்தில் ஓரமாக தரையில் அமர்ந்து ஒரு வழிப்போக்கரிடம் பேசிக்கொண்டிருந்தால் ஒரு  பெண்மணி அருகே செல்ல அந்த வழிப்போக்கரும் அங்கிருந்து சென்றார், கிளியின் பெயரைக்கூறி கூண்டுக்குள் போக சொல்ல அவ்வாறே கிளியும் கூண்டுக்குள் சென்றது கிளியை கூண்டினில் அடைத்துவிட்டு  கையில் வைத்திருந்த ஒரு கோலை பெட்டியில் வைத்தால், தேநீர் விடுதியில் புலம்பியது தன் காதில் கேட்டது போல அந்த பெண்மணி மதுவைப்பார்த்து வா தம்பி வா உன்னோட எதிர்காலம் எப்புடி இருக்குமுன்னு ஜோசியம் பார்க்கலாம் என்று கூற சற்று புருவத்தை உயர்த்தி யோசித்தான், அந்த பெண்மணியோ பத்து ரூபாதா தம்பி என்று கூற அந்த பெண்மணியின் அருகே சென்று ஜோசியம் பார்க்க அமர்ந்தான், தனதருகே  இருந்த பெட்டியை திறந்து ஒரு கோலை எடுத்து தனது கையில் வைத்துக்கொண்டு சில கடவுள்களின் பெயர்களை கூறிவிட்டு கையா ? கிளியா ? என்று அந்த பெண்மணி வினவ  மதுவோ என்ன என்று எதிர் கேள்வி எழுப்பினான் அதற்க்கு பதிலாக கிளி ஜோசியமா? இல்ல கைரேகை ஜோசியமாணு கேட்டேன் தம்பி என்று கூறினால் அப்பெண்மணி மது சிறிது யோசித்துவிட்டு கிளி என்றான் பெட்டியுடன்  இணைத்து  வைக்கப்படிருந்த கூண்டை திறந்தால் அந்த பெண் உள்ளே இருந்த கிளி வெளியே வரும் என்று எதிர்ப்பார்த்த மதுவிற்கோ சற்று ஏமாற்றம் கூண்டை விட்டு கிளி வெளியே வரவில்லை உடனே அப்பெண்மணி பெட்டியின் முன்பு வைத்திருந்த ஒரு சிறு துணி விரிப்பின் அருகே கையை காட்டி ஒரு பத்து ரூபா நோட்ட இங்க போடுங்க தம்பி என்று கூற அப்படியே செய்தான் மது, வா மா வா தம்பி பணத்த வச்சுட்டாருமா வெளிய வா என்று கூற கிளியும் கூண்டை விட்டு வெளியே வந்தது அந்த கிளியை வியந்து நோக்கினான் மது. உங்க பேர சொல்லுங்க தம்பி கிளிய சீட்டு எடுக்க சொல்லலாம் என்று கூறி பெட்டியில் இருந்த சில சீட்டுகளை எடுத்து அந்த விரிப்பின் மேல் போட மதுவோ எனக்கு வேண்டாம் எனக்கு தெருஞ்ச ஒரு பொண்ணுக்கு தா பாக்கணும் என்று கூற அப்புடிய தம்பி சரி ஆகட்டும் அந்த பொண்ணு பேர சொல்லுப்பா என்றால், சற்று தயக்கத்துடன் மீனாட்சி  என்றான் மது, வாமா வந்து மீனாட்சின்ற பேருக்கு ஒரு நல்ல சீட்டா  எடுமா என்று செல்லமாக தன் கிளியிடம் கூறினால் அப்பெண் தன் எஜமானி சொன்னது போல தன் அலகினால் ஒரு சீட்டையும் எடுத்தது சாமிய நல்ல கும்புட்டுக்கோமா என்று அந்த பெண்மணி கூற தன்னை  தானே மூன்று முறை சுற்றிவிட்டு அந்த சீட்டை அப்பெண்மணியின் கையில் தந்தது கிளி, சீட்டில் ஒரு கடவுளின் உருவப்படம் வர பெட்டியில் இருந்த புத்தகத்தை எடுத்து அந்த படத்திற்க்கான ஒரு பாடலை  பாட்டாக படித்துவிட்டு விளக்கம் கூற ஆரம்பித்தால் அப்பெண் இனிமேல் மீனாட்சிக்கு நல்ல காலம் தான் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி யார்கிட்டயும் எதுக்காகவும் நிக்கமட்டாங்க இவங்க தான் மத்தவங்களுக்கு எஜமானிய இருப்பாங்களே தவிர இவங்க யார்கிட்டயும் ஊழியரா பணிப்புரிய மாட்டாங்க இவங்களை யாரும் பூட்டுப்போட்டு கூண்டுக்குள்ள அடச்சுவக்க முடியாது  ஒரு சுதந்திர பறவையாதா சுற்றித்திறிவாங்க என்று அப்பெண்மணி கூறக்கூற, டேய் காலங்காத்தால என்னடா பண்னிட்டு இருக்க உனக்கு வேற வேல இல்லையா வாடா போலாம் என்று ஒரு சத்தம் என்னவென்று திரும்பிப்பார்க்க மதுவின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது அது மதுவின் அண்ணன், அண்ணனை பார்த்த சந்தோஷத்தில் எப்புடிடா  இருக்க என்று அண்ணனிடம் பேசிக்கொண்டே அந்த பெண்மணியின் முகத்தை சற்று கோபத்துடன் உற்று நோக்கியவாரு அங்கிருந்து விடைப்பெற அந்தப்பெண்ணோ கிளியை பார்த்து போ மீனாட்சி போ கூண்டுக்குள்ள போ என்றால் எஜமானியின் கட்டளையை ஏற்ற  மீனாட்சியோ கூண்டுக்குள் சென்றால் அழகாய் சோகத்துடன் கத்திக்கொண்டே......
- இரா.சுதர்சன் 

Friday, 6 April 2012

சில
உயிருள்ள பிணங்கள் வாழும்
கோட்பாடற்ற கோலோ
இந்த உலகம்....!!
-இரா.சுதர்சன் 

Thursday, 5 April 2012

அழுகை..
ஆனந்த வலியின்
வேதனைகளை வெளிக்கொணரும்
கண்நீரூற்று....!!
- இரா.சுதர்சன் 

Sunday, 25 March 2012

எழுத்தாளன் காகிதத்திற்கு சுமை எழுதுகோலிற்கு சுமை தாங்கி....!!
- இரா.சுதர்சன் 

Tuesday, 20 March 2012

பட்டாம்பூச்சிக்கு
படபடக்க கற்றுத்தந்தவளே..!
என்னை வைத்து மூடிக்கொள்
உன் இமைகளை இருக்கமாய்
இல்லையெனில் நானும்
பறக்க ஆரம்பித்துவிடுவேன் போல....!!
-இரா.சுதர்சன்

முடிவில்லாமல்
நீண்டுகொண்டே போகிறது
என் காதல்..!
இரு தண்டவாளங்களை போல
சேராமலேயே....!!
-இரா.சுதர்சன் 
காரணமில்லா  காதல்கொண்டு
கண்நீர்த்துளிகளும் கவிதையாம்
காகிதத்திலின்று....!!
-இரா.சுதர்சன்
இன்பமில்லை துன்பமுமில்லை
வெற்றியில்லை தோல்வியுமில்லை
பாராட்டுமில்லை  பழியுமில்லை
நண்பனுமில்லை பகைவனுமில்லை
நன்மையுமில்லை தீமையுமில்லை
உண்மையுமில்லை  பொய்யுமில்லை
சந்தோசமில்லை துக்கமுமில்லை
தனிமையில் இனிமை....!!
-இரா.சுதர்சன்




கழுதைக்கு காதல் வந்தால்
காகிதப்பரிசு..!
மனிதனுக்கு வந்தால்
மரணம் தான் பரிசு....!
-இரா.சுதர்சன் 
நல்லவனாய் இருந்தால் நசுக்குகிறது
நடுநிலையாய் இருந்தால் சிரிக்கிறது
தீயவனாய் இருந்தால் தூற்றுகிறது..!
உலகத்தின் பார்வை....!!
-இரா.சுதர்சன் 
எதிரியை தாழ்த்தி எண்ணாதே
உன்னையும் நீயே தாழ்த்தாதே..!
தாழ்ந்து போவாய் எதிரியிடம்....!!
-இரா.சுதர்சன்

உன்னிடம் பேசும்போது மட்டும்
நான் சொல்லும் சொல்லை கேட்பதில்லை
என் மனசு
வாய்க்கு வந்தப்படி உளறுகிறது
என் காதலை தவிர்த்து அனைத்தையும்....!!
-இரா.சுதர்சன் 

Sunday, 4 March 2012

என் வாழ்க்கையில்
அவள் கிறுக்கியதால்
நான் இந்த காகிதத்தில் இப்போது..!!
-இரா.சுதர்சன் 
அன்றோ
நினைவரியா வயதில்
வாய்விட்டு அழுதேன்
வேண்டியதை நிறைவேற்ற..!
இன்றோ
வாய் மூடி அழுகிறேன்
வேண்டியதை
நினைவிளிருந்தகற்ற....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 28 February 2012

புது வீடு திருஷ்டி பொம்மைக்கு
பேன்ட்டு சட்டையாம்..!
வேடிக்கை பார்க்கும் குழந்தை பிறந்த மேனியாம்....!!
-இரா.சுதர்சன்  

Tuesday, 21 February 2012

உயர்வு தாழ்வினை துடைத்தெடுத்து..
சாதியை சில்லாக சிதைத்தெடுத்து..
மதத்தை மூட்டைகட்டி..
முடிபோட்டனைத்தையும்  தீயிலிட்டு 
நாடை நாடாக்கி நாடோங்க
நாட வேண்டும் நல்ல நடப்பை....!!
-இரா.சுதர்சன் 

Monday, 20 February 2012

பட பட பேச்சும்
பால் போல சிரிப்பும்..
மீன் குவியாடி கண்ணும்
குளிக்கொண்ட கன்னமும்..
வெள்ளை மனசும்
வெகுளி குணமும்..
கார மிளகாய் மூக்கும்
கொத்தவரை காதும்..
சங்கு கழுத்தும்
சிவப்புக்கோவை உதடும்..
மேக கூந்தலும்
வானவில் புருவமும்..!
நீ கைக்கொடுத்த கையுக்கடி
கவிதை எழுத தோணுதடி..
காதலில் விழவில்லையடி
கால்வாசி உயிர் போனதடி..
இருந்தாலும் இக்கணம்
நோகுதே என்மனம்....!!
-இரா.சுதர்சன்








Wednesday, 15 February 2012

கையில் நெய், வெண்ணைக்கு அலைகின்றான்..!
மின்சாரம் வேண்டுமாம் ஆனால் கூடங்குளம் மட்டும் திறக்காது....!!
-இரா.சுதர்சன் 

Tuesday, 14 February 2012

ஆண் பெண் மீதோ
அல்லது
பெண் ஆண் மீதோ
வைப்பது மட்டும் காதலல்ல
காதல் என்பது
ஒருவர் மீது ஒருவர்
காட்டும் ஓர்
ஆரோகியமான உணர்வும் கூட....!!
-இரா.சுதர்சன் 

Sunday, 12 February 2012

வரும் கால தூண்கள் சுமக்கின்றன..!
புத்தகப்பையை அல்ல
தூண்கள் செய்ய செங்கற்களை....!!
-இரா.சுதர்சன்

குழந்தை தொழிலாளி..!

வீடுகள் பெருக்கி
குப்பைகள் சேர்த்து
குப்பைக்கூடதிலிட்டான்
குழந்தை தொழிலாளி.....

குப்பையில்
கோழியை போல் கிளறி
நகரமெங்கும் அலைந்து
காகிதம் சேகரித்தான்
குழந்தை தொழிலாளி..... 

பாத வண்டியில்
காகித பொதியேற்றி பறந்து
பணிமனையில் பறிமாறினான்
குழந்தை தொழிலாளி.....

இயந்திரத்தை இயக்கி
காகிதத்தை கூழாக்கி
புதியதோர் காகிதம் செய்தான்
குழந்தை தொழிலாளி..... 

செய்த காகிதத்தில்
நூலினை கோர்த்து
படம் போட்டு எழுத்தச்சிட்டான்
குழந்தை தொழிலாளி..... 

புதியதோர் புத்தகம் செய்து
பள்ளிக்கு எடுத்துச்சென்றான்
பாட புத்தகமாய்
குழந்தை தொழிலாளி..... 

இத்தனைக்கும்
பின்னின்று பாடுபட்டு
புயத்தில் சுமக்கிறான்
குழந்தை தொழிலாளி
""புத்தக பையல்ல""
புழுதி நிறைந்த சாக்குப்பையை
மீண்டும் வீட்டை பெருக்கி
போட்ட குப்பையை சேகரிக்க
குழந்தை தொழிலாளி....!!

-இரா.சுதர்சன்

Saturday, 11 February 2012

ஒ இதற்க்குப்பெயர் தான் அரசியலா..!
எனக்கு புரியாத புதிராய் இருந்த அரசியலை
புரியவைத்தான் அலுவலக அரசியலாக 
நான் நம்பிய துரோகி..
ஆயினும் நன்றி சக பணியாலா
எனக்கு  அரசியலை புரியவைத்ததர்க்காக….!!
-இரா.சுதர்சன் 

Wednesday, 8 February 2012

பெண்களின் கண்ணக்குழி
ஆண்களை
காதலில் கூட விழவைக்கும்
புதர்க்குழி....!!
-இரா.சுதர்சன் 
உன் குறும்பு குணம் கண்டு காதலித்தேன்..!
என் காதலையும்
குரும்பாகதான்  ஏற்றுக்கொள்வாய்
என்றறியாது....!!
-இரா.சுதர்சன் 
விரக்தியுடன் வாழ வழி இன்றி விவசாயி
தூக்கிற்கு கயிர் கூட வாங்க துப்பில்லையம்
மதிய மாநில அரசோ மார்தட்டி கொள்கிறது
விவசாயிகளின் தரம் உயர்ந்துள்ளதாம்
ஆம் உயர்ந்து தான் உள்ளது
தொங்கும் அளவிற்கு..!
நெஞ்சு பொறுக்குதில்லையே
நாட்டின் உயிர் நாடி 
உயிர் அற்று போகும் போல....!!
-இரா.சுதர்சன்  
கைகளால் கோலம் போட தெரியாதவள்
கால்களால் போடுகிறாள்..!
கடற்கரை மணலில்
அவள் பாத சுவடுகள்....!!
-இரா.சுதர்சன்

கடவுளுக்கு பூஜை
காதலுக்கு கவிதை..!
லஞ்சங்கள்....!!
-இரா.சுதர்சன்

கல்லறை வாசம்..!
காதல் வலையில் சிக்கும்
சில மீன்களின் வாசஸ்தலம்....!!
-இரா.சுதர்சன்  
அறிந்தேன்..!
நான் நாமாகும் தருணத்தில்
நாணத்தை....!!
- இரா.சுதர்சன் 

Monday, 6 February 2012

கூயில் பா சீ 
பூ ஏ இட்டு தா நே 
ஐபில் வீபோல மீ மீ.. 
வா நீ நின் தே நான்.....!!
 -இரா.சுதர்சன் 


பூமியில் அழகு திருமகள்
பூ அம்பு இட்டு கேட்பது அன்பு
வியப்பில் பறவை போல மேல மேல நான்...
அழைத்தேன் உன் நாயகன் நான் தான் என்று.....!! 

 -இரா.சுதர்சன்   

(கூ > பூமி, பா >அழகு, சீ >திருமகள், ஏ > அம்பு, தா >கேட்பது, நே > அன்பு, ஐ >வியப்பு, வீ>பறவை, மீ > மேலே , தே > நாயகன் )
ஒற்றை தமிழ் எழுத்திற்கு அர்த்தங்கள்

அ ===> எட்டு
ஆ ===> பசு
ஈ ===> கொடு, பறக்கும் பூச்சி
உ ===> சிவன்
ஊ ===> தசை, இறைச்சி
ஏ ===> அம்பு
ஐ ===> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ ===> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா ===> சோலை, காத்தல்
கூ ===> பூமி, கூவுதல்
கை ===> கரம், உறுப்பு
கோ ===> அரசன், தலைவன், இறைவன்
சா ===> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ ===> இகழ்ச்சி, திருமகள்
சே ===> எருது, அழிஞ்சில் மரம்
சோ ===> மதில்
தா ===> கொடு, கேட்பது
தீ ===> நெருப்பு
து ===> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ ===> வெண்மை, தூய்மை
தே ===> நாயகன், தெய்வம்
தை ===> மாதம்
நா ===> நாக்கு
நீ ===> நின்னை
நே ===> அன்பு, நேயம்
நை ===> வருந்து, நைதல்
நொ ===> நொண்டி, துன்பம்
நோ ===> நோவு, வருத்தம்
நௌ ===> மரக்கலம்
பா ===> பாட்டு, நிழல், அழகு
பூ ===> மலர்
பே ===> மேகம், நுரை, அழகு
பை ===> பாம்புப் படம், பசுமை, உறை
போ ===> செல்
மா ===> மாமரம், பெரிய, விலங்கு
மீ ===> ஆகாயம், மேலே, உயரம்
மு ===> மூப்பு
மூ ===> மூன்று
மே ===> மேன்மை, மேல்
மை ===> அஞ்சனம், கண்மை, இருள்
மோ ===> முகர்தல், மோதல்
யா ===> அகலம், மரம்
வா ===> அழைத்தல்
வீ ===> பறவை, பூ, அழகு
வை ===> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ ===> கௌவுதல், கொள்ளை அடித்தல்


Saturday, 4 February 2012

என்மனமும்
விதை போல இருந்திருந்தால்
வெளிகாட்டியிருப்பேன்
பூட்டிவைக்காமல்..!
என்மனது முழுவதுமாய் நீதானென்று....!!
-இரா.சுதர்சன்    

அனைத்திற்கும் எல்லை
என்னிடம் உண்டு..!
உன் நினைவுகளின் மேல்
வைத்துள்ள காதலை தவிர்த்து....!!
-இரா.சுதர்சன்
வீரனும் கோழையாகி விடுகிறான்..!
காதலெனும் விடைக்காக
காதலோ என்று
கேள்வி எழுப்பும்போது....!!
-இரா.சுதர்சன்

எனக்கு  உயிராய் 
என் கவிதைக்கு உருவாய்
இருந்தவள்
ஓர் வார்த்தையில் உதறிச்செல்ல..
என் உயிர் பிரிந்து
என் உருவான கவிதை மட்டுமிங்கே....!!
-இரா.சுதர்சன்  


நிமிரிந்து சென்றவன்
நிலை கெட்டுக்கிடக்கிறான்..!
சரக்கு ரயில்....!!
-இரா.சுதர்சன் 
காதல்..
கல்லறை ஏற்றும்
ஞாலத்தின் காலன்....!!
-இரா.சுதர்சன் 
காதல்..!
அள்ளி அள்ளி
பருகவேண்டிய அமிர்தமில்லை
அளந்து பருகவேண்டிய
நஞ்சான மருந்து....!!
-இரா.சுதர்சன் 
தெளிந்த குளத்தை
கலங்க வைக்கும் கல்லைப்போல 
என் மனதில் நீ வந்து போக
கலங்குகின்றது என் கண்கள்....!!
-இரா.சுதர்சன் 
இரவில்லாமல் விடியலேது..!
துன்பம் கண்டு துவளாதே
தீமை கண்டு அஞ்சாதே
இருளிலிருக்கும் உனக்கு 
நிச்சயம் ஓர் விடியல் உண்டு
நம்பிக்கை என்னும் ஒளியில்....!!
-இரா.சுதர்சன் 
கற்பனைகள்..!
புதிர் நிறைந்ததோர் புதர்க்குழிகள்....!!
-இரா.சுதர்சன்  
எனக்கு காதலை கற்ப்பித்தவள்
என் முதல் பார்வையின்
பரிமாற்றத்தில் இருந்தே..
என்னையும் கடவுளாக்கி பார்த்தவள்
அவளின் கருவறையில் வைத்து..!
என்ன தவம் செய்தேனோ
இவளை நான் தாயாய் பெறுவதற்கு....!!
-இரா.சுதர்சன்


Sunday, 29 January 2012

என்னதான் தவறு செய்தேனோ..!
அவள் மட்டுமின்றி அவள்
கால்களின் கொலுசும் கூட
மௌனமாய் என்னிடம்....!!
-இரா.சுதர்சன்

வேதனையில் சாதனை..!
கவிஞனாக நான்....!!
-இரா.சுதர்சன் 
வணங்கு......
கருவறையில் கல்லில் கடைந்து வைத்துள்ள
சிற்பத்தை காட்டிலும்
கருவறையில் உன்னை சுமந்த தாயை
அதிகமாக வணங்கு....!!
- இரா.சுதர்சன்
காதல் நினைவுகள்
சுடும் வரை சொர்க்கம்..!
சுட்ட பின் நரகம்.....!!
-இரா.சுதர்சன்

Friday, 27 January 2012

கோவிலின் கருவறையில்
கடவுளை கண்டதில்லை..!
கருவறையில் சுமந்த
தாயை மட்டும் பார்க்கிறேன்
கடவுளாக  நான்....!!
-இரா.சுதர்சன் 
பூவில் மது..!
உன்னில் உதடுகள்....!!
-இரா.சுதர்சன்
கன்னங்கள் பழுக்குமா ?
என் தேவதை கண்ணெதிரே வர 
இது கனவா  நினைவா
என்று புரியாது 
அவள் கண்ணங்களில் 
முத்தமிட சென்றேன்..! அவள்  
கைவிரல்கள் என் கன்னங்களை 
தீண்டியப்பின் புரிந்துக்கொண்டேன் 
 கன்னங்கள் பழுக்குமென்று....!!
-இரா.சுதர்சன்

Saturday, 21 January 2012

காந்திக்கு எப்போதும் மதிப்பு தான்..!
பணத்தில் அவர் புன்னகைக்கும் வரையில்....!!
-இரா.சுதர்சன்  
நீ என் கண்களாக இருந்தால்
சில நொடிக்கு மட்டுமல்ல
நிரந்தரமாக கூட மூடிக்கொள்வேன்..!
இருக்கமாய் என் இமைகளை....!!
-இரா.சுதர்சன்
இவர்களும் தான் வளர்க்கிறார்கள்..!
ஆனால் 
பயனளிக்குமா வரும்காலத்தில் ?
காடுகளை அளித்து கான்கிரிட் கட்டிடங்களாய்....!!
-இரா.சுதர்சன் 

Friday, 20 January 2012

பாராட்டு.......
வெற்றியாலனின் பெருமைமிகு வெற்றி என்றாலும் அவனுக்குரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை  என்றால்... அவனை பொறுத்தவரையில் அது வெற்றியடைந்தும் தோல்வியே.....
-இரா.சுதர்சன் 

Wednesday, 18 January 2012

பெண்கள் புத்திசாலிகள் தான்..!
ஆண்கள் அவ்வப்போது
முட்டாள்கள் ஆகும் போது....!!
-இரா.சுதர்சன் 
புன்னகை செய்யாதே..!
என்னை தவிர யாராவது
பூ பூக்கும் ஓசையை கேட்டுவிட்டால்....!!
-இரா.சுதர்சன் 
உன்னை 
பார்க்கும் போது மட்டும்
பறக்கின்றேன் ஆனால் 
கால்கள் மட்டும் தரையில்..!
காதலின் அறிகுறியோ....!!
-இரா.சுதர்சன்   

Wednesday, 11 January 2012

உன் அழகான
கன்னக்குழியின் ஆழம் அறிந்தேன்..!
உன் ஒரைக்கண் பார்வைப்பார்த்து
என் இதயம் இடறியதில்....!!
- இரா.சுதர்சன்  

Monday, 9 January 2012

ஆண்டவன் ஆண்களின் மனதை மட்டும்
ஏன் தான் இப்படி மெழுகாய் படைத்தானோ..!
இந்தப்பெண்களை பார்த்து
உருகுவதர்க்காய் இருக்குமோ....??
-இரா.சுதர்சன் 
அழகான மலருக்கு
ஏன் தான் மேலும் மேலும்
அழகு சேர்க்கிறாலோ  
அவளின் கார்கூந்தளிலிட்டு....!!
-இரா.சுதர்சன் 
வற்றும்  கிணறு கூட வற்றாது..!
ஐந்தரிவாம் தவளைக்கு
காதல் தெரிந்து தோற்றால்....!!
-இரா.சுதர்சன் 
வேண்டாம் என்று சொன்னாலும்
விடாமல் எனக்கு
வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்..! 
நேரில் பலர் வணங்கும் அரசியல்வாதி
சுவர் ஒட்டியில் என்னை பார்த்து....!!
-இரா.சுதர்சன்

ஊருக்குள்
கவிஞர்கள் அதிகமாம்..!
என்னை
காதலிக்க வேண்டாம் என்கிறாள் என்னவள்....!!
-இரா.சுதர்சன்


நான் மெய்மறந்து
தூங்கினாலும் கூட..!
உன் நினைவுகள் மட்டும்
நீங்காமல் என் நினைவில்....!!
-இரா.சுதர்சன் 
கவலைகள் கண்ணீராய் கைக்கோர்த்து
கேட்பார் யாருமின்றி தனிமையில்
தனிமரமாய் நான் இருக்க..
காற்றை கிழிக்கும் ஊஞ்சல் போல
என் கவலைகளை கிழிக்க வந்தவளே
காதலெனும் கப்பலேறி
மணம்முடித்து கறைக்காண வைத்த
கலங்கரை விளக்கே..
கவலைதனை மறக்கவைத்து
காவியம் படைக்க வைத்தவளே
நீ உறங்க நான் பாடி
உன் கனவினை அனுபவிக்கிறேன்
என் கண்விழித்து..
என் பெண்ணே,
உன்னால் இன்று என் கவலைக்கண்ணீர்
ஆனந்த கண்ணீராய்.....!!


- இரா.சுதர்சன்



Saturday, 7 January 2012

பருவத்தில் கசக்கும் காதல் செயற்கை..!
முதுமையில் இனிக்கும் காதல் இயற்க்கை....!!
-இரா.சுதர்சன்

Thursday, 5 January 2012

வானம் தண்ணீரின் நீல நிறத்தை மட்டுமல்ல
என்னவளின் கோபத்தையும் வெட்கத்தையும்
கூட பிரதிபலிக்கிறது இப்படி
அந்தி வானின் சிகப்பு வண்ணமாய்....!!
-இரா.சுதர்சன் 
வானிலை அறிக்கை போல
என் மனமும் உன் வருகையை அறிவிக்கிறது..!
ஆனால் இரண்டிற்கும் விடை மட்டும்
ஒன்று போல தான் இருக்கிறது....!!
-இரா.சுதர்சன் 
கண்ணாடிக்கு கண்கள் கிடையாது..!
இல்லையேல் அது உன்
முதற் காதலனாய் இருந்திருக்கும்....!!
-இரா.சுதர்சன்  
அவளை பற்றி எழுத
வார்த்தைகளே இல்லை..!
ஆயினும் எழுதினேன்
வார்த்தை இல்லா மொழியில்
அவளின் பெயரை மட்டும்....!!
-இரா.சுதர்சன் 
பிருந்தாவனம் வேண்டாம் - அவள்
புன்னகை பூத்த
புகைப்படம் ஒன்றே போதும்
இந்த உலகத்தையே அலங்கரிக்க....!!
-இரா.சுதர்சன் 

Sunday, 1 January 2012

தரை தட்டியது
கப்பல் மட்டுமல்ல..!
என்
இதயமும் சேர்ந்துதான்
காதலெனும் புயலால்....!!
-இரா.சுதர்சன்
காதலுக்காக..
அனைத்தையும் துறந்தேன்..!
காதலிக்காக காதலையும் சேர்த்து....!!
-இரா.சுதர்சன்