Sunday, 29 January 2012

என்னதான் தவறு செய்தேனோ..!
அவள் மட்டுமின்றி அவள்
கால்களின் கொலுசும் கூட
மௌனமாய் என்னிடம்....!!
-இரா.சுதர்சன்

வேதனையில் சாதனை..!
கவிஞனாக நான்....!!
-இரா.சுதர்சன் 
வணங்கு......
கருவறையில் கல்லில் கடைந்து வைத்துள்ள
சிற்பத்தை காட்டிலும்
கருவறையில் உன்னை சுமந்த தாயை
அதிகமாக வணங்கு....!!
- இரா.சுதர்சன்
காதல் நினைவுகள்
சுடும் வரை சொர்க்கம்..!
சுட்ட பின் நரகம்.....!!
-இரா.சுதர்சன்

Friday, 27 January 2012

கோவிலின் கருவறையில்
கடவுளை கண்டதில்லை..!
கருவறையில் சுமந்த
தாயை மட்டும் பார்க்கிறேன்
கடவுளாக  நான்....!!
-இரா.சுதர்சன் 
பூவில் மது..!
உன்னில் உதடுகள்....!!
-இரா.சுதர்சன்
கன்னங்கள் பழுக்குமா ?
என் தேவதை கண்ணெதிரே வர 
இது கனவா  நினைவா
என்று புரியாது 
அவள் கண்ணங்களில் 
முத்தமிட சென்றேன்..! அவள்  
கைவிரல்கள் என் கன்னங்களை 
தீண்டியப்பின் புரிந்துக்கொண்டேன் 
 கன்னங்கள் பழுக்குமென்று....!!
-இரா.சுதர்சன்

Saturday, 21 January 2012

காந்திக்கு எப்போதும் மதிப்பு தான்..!
பணத்தில் அவர் புன்னகைக்கும் வரையில்....!!
-இரா.சுதர்சன்  
நீ என் கண்களாக இருந்தால்
சில நொடிக்கு மட்டுமல்ல
நிரந்தரமாக கூட மூடிக்கொள்வேன்..!
இருக்கமாய் என் இமைகளை....!!
-இரா.சுதர்சன்
இவர்களும் தான் வளர்க்கிறார்கள்..!
ஆனால் 
பயனளிக்குமா வரும்காலத்தில் ?
காடுகளை அளித்து கான்கிரிட் கட்டிடங்களாய்....!!
-இரா.சுதர்சன் 

Friday, 20 January 2012

பாராட்டு.......
வெற்றியாலனின் பெருமைமிகு வெற்றி என்றாலும் அவனுக்குரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை  என்றால்... அவனை பொறுத்தவரையில் அது வெற்றியடைந்தும் தோல்வியே.....
-இரா.சுதர்சன் 

Wednesday, 18 January 2012

பெண்கள் புத்திசாலிகள் தான்..!
ஆண்கள் அவ்வப்போது
முட்டாள்கள் ஆகும் போது....!!
-இரா.சுதர்சன் 
புன்னகை செய்யாதே..!
என்னை தவிர யாராவது
பூ பூக்கும் ஓசையை கேட்டுவிட்டால்....!!
-இரா.சுதர்சன் 
உன்னை 
பார்க்கும் போது மட்டும்
பறக்கின்றேன் ஆனால் 
கால்கள் மட்டும் தரையில்..!
காதலின் அறிகுறியோ....!!
-இரா.சுதர்சன்   

Wednesday, 11 January 2012

உன் அழகான
கன்னக்குழியின் ஆழம் அறிந்தேன்..!
உன் ஒரைக்கண் பார்வைப்பார்த்து
என் இதயம் இடறியதில்....!!
- இரா.சுதர்சன்  

Monday, 9 January 2012

ஆண்டவன் ஆண்களின் மனதை மட்டும்
ஏன் தான் இப்படி மெழுகாய் படைத்தானோ..!
இந்தப்பெண்களை பார்த்து
உருகுவதர்க்காய் இருக்குமோ....??
-இரா.சுதர்சன் 
அழகான மலருக்கு
ஏன் தான் மேலும் மேலும்
அழகு சேர்க்கிறாலோ  
அவளின் கார்கூந்தளிலிட்டு....!!
-இரா.சுதர்சன் 
வற்றும்  கிணறு கூட வற்றாது..!
ஐந்தரிவாம் தவளைக்கு
காதல் தெரிந்து தோற்றால்....!!
-இரா.சுதர்சன் 
வேண்டாம் என்று சொன்னாலும்
விடாமல் எனக்கு
வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்..! 
நேரில் பலர் வணங்கும் அரசியல்வாதி
சுவர் ஒட்டியில் என்னை பார்த்து....!!
-இரா.சுதர்சன்

ஊருக்குள்
கவிஞர்கள் அதிகமாம்..!
என்னை
காதலிக்க வேண்டாம் என்கிறாள் என்னவள்....!!
-இரா.சுதர்சன்


நான் மெய்மறந்து
தூங்கினாலும் கூட..!
உன் நினைவுகள் மட்டும்
நீங்காமல் என் நினைவில்....!!
-இரா.சுதர்சன் 
கவலைகள் கண்ணீராய் கைக்கோர்த்து
கேட்பார் யாருமின்றி தனிமையில்
தனிமரமாய் நான் இருக்க..
காற்றை கிழிக்கும் ஊஞ்சல் போல
என் கவலைகளை கிழிக்க வந்தவளே
காதலெனும் கப்பலேறி
மணம்முடித்து கறைக்காண வைத்த
கலங்கரை விளக்கே..
கவலைதனை மறக்கவைத்து
காவியம் படைக்க வைத்தவளே
நீ உறங்க நான் பாடி
உன் கனவினை அனுபவிக்கிறேன்
என் கண்விழித்து..
என் பெண்ணே,
உன்னால் இன்று என் கவலைக்கண்ணீர்
ஆனந்த கண்ணீராய்.....!!


- இரா.சுதர்சன்



Saturday, 7 January 2012

பருவத்தில் கசக்கும் காதல் செயற்கை..!
முதுமையில் இனிக்கும் காதல் இயற்க்கை....!!
-இரா.சுதர்சன்

Thursday, 5 January 2012

வானம் தண்ணீரின் நீல நிறத்தை மட்டுமல்ல
என்னவளின் கோபத்தையும் வெட்கத்தையும்
கூட பிரதிபலிக்கிறது இப்படி
அந்தி வானின் சிகப்பு வண்ணமாய்....!!
-இரா.சுதர்சன் 
வானிலை அறிக்கை போல
என் மனமும் உன் வருகையை அறிவிக்கிறது..!
ஆனால் இரண்டிற்கும் விடை மட்டும்
ஒன்று போல தான் இருக்கிறது....!!
-இரா.சுதர்சன் 
கண்ணாடிக்கு கண்கள் கிடையாது..!
இல்லையேல் அது உன்
முதற் காதலனாய் இருந்திருக்கும்....!!
-இரா.சுதர்சன்  
அவளை பற்றி எழுத
வார்த்தைகளே இல்லை..!
ஆயினும் எழுதினேன்
வார்த்தை இல்லா மொழியில்
அவளின் பெயரை மட்டும்....!!
-இரா.சுதர்சன் 
பிருந்தாவனம் வேண்டாம் - அவள்
புன்னகை பூத்த
புகைப்படம் ஒன்றே போதும்
இந்த உலகத்தையே அலங்கரிக்க....!!
-இரா.சுதர்சன் 

Sunday, 1 January 2012

தரை தட்டியது
கப்பல் மட்டுமல்ல..!
என்
இதயமும் சேர்ந்துதான்
காதலெனும் புயலால்....!!
-இரா.சுதர்சன்
காதலுக்காக..
அனைத்தையும் துறந்தேன்..!
காதலிக்காக காதலையும் சேர்த்து....!!
-இரா.சுதர்சன்