Monday, 28 May 2012

மாறிவிட்டான் மனிதனாக..!
ஆனால் மனம் மட்டும்
இன்றளவும் குரங்கைப்போல
அங்குமிங்குமாய்....!!
-இரா.சுதர்சன் 
 நினைவுகள் நீங்குவதில்லை
முடிவுவரை
முதற்முறையில்
ஒருமுறையாயினும்
ஓட்டத்தின் இறுதிவரை..!
காதல் தோல்வி....!!
-இரா.சுதர்சன்  
என் கவிதைகள் 
பூர்த்தியடைவதில்லை..!
இறுதியில் 
உன் பெயராம் 
என் புனைப்பெயரை இடாமல்..!!
-இரா.சுதர்சன்  

Thursday, 24 May 2012

கேணி தொட்ட  தண்ணீரை விட
உன் மேனி தொட்ட தண்ணீருக்கு
சுவை அதிகமடி....!!
- இரா.சுதர்சன்

Wednesday, 23 May 2012

எளிமையானவர்..!
பெரிய வீட்டை
வைத்துக்கொண்டு
வாசம்செய்கிறார்
அதிகமாக
சிறிய வீட்டிற்க்கு....!!
-இரா.சுதர்சன் 
அன்றோ விஞ்ஞானி
புதிய படைப்புகள் 
புதிய முயற்சிகளுக்கு..!
இன்றோ பைத்தியக்காரன்....!!
-இரா.சுதர்சன் 

Monday, 21 May 2012

பார்வை
பறிமாற்றம்..
காதல்
சந்தேகம்..
கவலை
கண்ணீர்..
கவிதை
கல்லறை..!
காதலின் கதை....!!
-இரா.சுதர்சன்  

Sunday, 20 May 2012

கணக்கில்லா காதல் கொண்டேன் 
பகிராமல் பற்றிக்கொண்டாள்  
சுவாசமின்றி சுருண்டுக்கிடந்தேன் 
சுகமான சுவாசமாய் 
உயிரோட்டம் பெற்றுத்தந்தாள் 
இருட்டறையாம் 
கருவறை சிம்மாசனத்தில் 
கடவுளாய் குடியேற்றினாள்   
எனக்காக துடித்த
என் முதல் இதயமாய் 
இனிய அம்மா....!!
-இரா.சுதர்சன்  

Friday, 18 May 2012

கண்கள் பார்த்து
புன்னகைப்பூ பூத்து
இமைகளை 
இறுக்கமாய் மூடி 
இதயம் இடறி
மனது மயங்கி
கைகள் கசக்கி
கால்களால் கோலம்..!
வெட்கமாம்....!!
-இரா.சுதர்சன் 
பார்த்து.. 
பாதியோடு பறிப்போகும் 
வாழ்க்கைப்பயணம்..!
இனி வேண்டாம் 
படியில் பயணம்....!!
-இரா.சுதர்சன் 

Wednesday, 16 May 2012

நான் கவிதை எழுத
காகிதம் கூட தூய்மையாகவே உள்ளது..!
உன் தூய எண்ணத்திற்கு
கவிதை எனும் உயிர் தந்து
அலங்கரிக்க எண்ணி....!!
-இரா.சுதர்சன் 
காதலுக்காக கவிதை
எழுதி எழுதி என் 
கைகள் மட்டுமல்ல 
மனதும் காய்ந்துவிட்டது..!
உன்னை மறப்பது போல 
இனி இந்தக்கவிதையையும்....!!
-இரா.சுதர்சன் 

Sunday, 13 May 2012

நம்மில் பாதியாம் நட்பு அதற்க்கு
நாடறிய நன்றிகள் எதற்க்கு..?
புன்னகைப்பூவொன்று போதுமாம்
பூலோகம் முழுவதுமாய்
பூத்துக்குலிங்கிடும் நட்பு....!!
-இரா.சுதர்சன் 
கருவறை
கற்சிலைகள்
கடவுள் இல்லை..!
உன்னை
கருவறையில்
சுமந்த  
அன்னை மட்டுமே....!!
-இரா.சுதர்சன்

Friday, 11 May 2012

தலையேறா தாமரை..!
முதிர்க்கன்னி....!!
-இரா.சுதர்சன்

Thursday, 10 May 2012

உன் விழி
அம்பு கொண்டு எய்ததினால்
என் இதயம்
காயமடைந்துள்ளது..!
காதலெனும் பெயரில்....!!
-இரா.சுதர்சன் 
காதலுக்காக 
எதையும் செய்ய 
துணிந்த நான்..!
காதலுக்காக 
காதலை 
துறந்த நிலையில்....!!
-இரா.சுதர்சன்  

Sunday, 6 May 2012

சில்லறை சத்த சிரிப்புடன் 
பொக்கைவாய் பாட்டி..!
கையில் பிட்சைப்பாத்திரம்....!!
-இரா.சுதர்சன்