Friday, 30 December 2011

கண்களின் வழியே
நான் எழுதிய முதல் கவிதை
கண்ணீர்..!
காதலெனும் தூசியினால்....!!
-இரா.சுதர்சன் 
பூக்களும் பார்த்து பொறாமைப்பட 
பூத்து குலுங்கட்டும் நம் புன்னகை தோட்டம்
ஏ பூவே பொறமை படதே 
கற்றுக்கொள் எங்களை பார்த்து....!!
-இரா.சுதர்சன்
தேர் போல
வீதிகளில் சுற்றும் என் மனம்
ஏனோ
உன்னை கண்டால் மட்டும்
நிலைக்கு வந்துவிடுகிறது....!!
-இரா.சுதர்சன் 
இரட்டை கிளவியை பிரித்தால்
எப்படி பொருள் இல்லையோ
அப்படித்தான்,
நியும் நானும்..!
காதலுக்கு....!!
-இரா.சுதர்சன்
ஏதும் பயனில்லை..
ஒற்றைக்காலில்
தவமிருக்கும் ரோஜாவே..!
அவள் என்னைத்தான் நேசிக்கிறாலாம்....!!
-இரா.சுதர்சன்   

Wednesday, 28 December 2011

கடல் நீர் மேக மழையாய்
பூமியை குளிர்விப்பது போல
காதல் தோல்வியால்
மனம் தொய்ந்து கண்ணீராய்..!
இந்த சூரியனை குளிர்விக்கவோ....!!
-இரா.சுதர்சன்
இயற்க்கை எய்தாமல்
எய்திக்கொண்டிருக்கிறேன்  
ஒவ்வொரு நொடியும்..!
காதலெனும் விபத்தால்....!!
-இரா.சுதர்சன் 
என்னுள் என்றும்
அழியா காதல் பரிசாய்
அவளின் நினைவுகள்..!
வெற்றிக்காக அல்ல....!!
-இரா.சுதர்சன் 
பணம் இருந்தும் ஏழை
உணவிருந்தும் பட்டினி
நீர் இருந்தும் நீர் இல்லை
ஒற்றுமை இல்லா வேற்றுமை 
வாய்மையும் வெல்லாது
கடமைக்கு லஞ்சம் 
உரிமைக்கு போராட்டம்
சுதந்திரம் வாங்கியும் அடிமை
என்ன தான் அரசியலின் சூத்திரமோ ...!!
-இரா.சுதர்சன் 

மௌனம் கூட மொழியாம்..!
உன் உதடுகள் ஊமையாகும் பொழுது....!!
- இரா.சுதர்சன் 
கல்லுக்குள் ஈரம்..!
என்னவளின் இதயத்தில் நான்....!!
- இரா.சுதர்சன் 

Tuesday, 27 December 2011

கண்டேன்..
குளிர் நிலவுக்கூட
முகம் சிவந்து
நெருப்பாய் எரிந்தது..!
என்மீதான
என்னவளின் கோபம்....!!
-இரா.சுதர்சன்

உலகிற்க்கோர் கதவிருந்தால்
அங்கே இருக்கலாம்
மனிதர்கள் ஜாக்கிரதை என்று....!!
-இரா.சுதர்சன் 
அவள் வெள்ளை மனதுக்காரி போல..!
இந்த சூரியனின் காதல் கதிர்களை
ஏற்க்க மறுக்கிறது அவள் மனது....!!
-இரா.சுதர்சன் 
அவள்..
ராகம் பாடி இனிக்கவில்லை..
முத்தம் தந்தும் சுவைக்கவில்லை..
சட்டென்று போர்வையை போர்த்தினேன்
அன்புத்தொல்லையிலிருந்து விடுபட..!
நள்ளிரவு தூக்கத்தை தொலையவைத்த
கொடுமைக்காரி கொசு....!!
-இரா.சுதர்சன்
உண்மைதான்..!
காதலித்தேன்
கவிஞனானேன்
கண்ணீருடன்....!!
-இரா.சுதர்சன்

Monday, 26 December 2011

அனைத்தையும் 
ஆள பிறந்த  மனிதனையும் 
ஆள பிறந்த ஆயுதம் தான்
இந்த மனிதனின் 
மனது....!!
- இரா.சுதர்சன் 
வாழ்க்கை....
விடை தெரியாமல் கேள்விக்குறியாய்
விடை தெரிந்தும் கேள்விக்குறியாய்
 மரணம்....!!
- இரா.சுதர்சன் 

Saturday, 24 December 2011

புரியவில்லை..!
சில மணி நேர 
சுகமான தூக்கத்திற்கு அலையும் மனிதன்..
நிரந்தர சுகமாம் 
சுடுகாட்டு உறக்கத்திர்க்கு மட்டும் அஞ்சுவது ஏனோ....??
- இரா.சுதர்சன்

Friday, 23 December 2011

கலிகாலத்தில் யாரயும் நம்பாதே..!
காரியம் முடிந்தால்
கால்களை  வாரி விடும்
கள்ளர்கள் வாழும்
கூட்டமடா இது....!!
- இரா.சுதர்சன்

ஊனமுற்றோர்  முன்னிலையில்
ஏதும் செய்யாமல்
ஊமையாய் இருப்பின்
குறையின்றி இருக்கும்
மனிதர் கூட
ஊனமுற்றோரே....!!
-இரா.சுதர்சன்
வெயில் பாரா பறவை போல நான்..!
ஆம்
தீபம்போன்ற என்னவளை
எப்போது  பார்த்தாலும்
அனைக்கவே  தோன்றுகிறது....!!
-இரா.சுதர்சன்
பெண்களை கிண்டல் செய்தவரை
கடவுள் என்றார்கள் அன்று..!
அதையேஇப்பொது செய்தால்
ஈவ்  டீசிங் என்று சொல்லி
உள்ளே போடுகிறார்கள்  இன்று....!! 
-இரா.சுதர்சன்  
பால் என்ன
மோர் என்ன
தயிர் என்ன
தேன் என்ன
காய்கள் என்ன
கனிகள் என்ன
அட அட..!
சிறு வயிற்றிற்கு ஏதும் இன்றி
பஞ்சப்பாட்டு பாடும் மனிதர்கள் நடுவே
மௌனமாய் இருக்கும் கற்சிலைக்கு படையளாம்....!!
- இரா.சுதர்சன்

Thursday, 22 December 2011

நீருமில்லை கண்ணாடியுமில்லை..
ஆனால் கண்கள் மட்டும் கூசுகின்றது 
என்னவள் கண்களை பார்த்தது போல..!
ஹோ மயிர் இல்லா மண்டையுடன்
என்னவளின் தந்தை அது....!
-இரா.சுதர்சன்

( இது என்னவளின் தந்தைக்கு சமர்ப்பணம் ஹ ஹ ஹ ஹ )


நிலை கெட்ட மனிதர்கள்
தன்னை நிலைநிறுத்திக்கொள்ள..
தெரிந்தொன்று தெரியாமலொன்று பேசும்
புத்திசாலி சில இந்த அலுவலகங்களிலும்
இருக்கும் அரசியல்வாதிகளாம்....!!
-இரா.சுதர்சன் 
உணர்ச்சி பெருக்கெடுத்து..
உதடுகள் முறுக்கேறி..
பற்களை கடித்து..
விரல்களை முறுக்கி..
ரத்தம் தலைக்கேற..
கண்கள் சிவந்து..
இதய துடிப்பு அதிகரிக்க..
அச்சோ அச்சோ..!
எத்தனை  வரவேற்ப்பு
யாரும் வரவேற்க்காத
இந்த கோபத்திற்கு....!!
- இரா.சுதர்சன் 


நான் இனி கவி எழுத போவதில்லை
என்று நினைக்கிறான்..!
ஆம் உண்மை தான்
என்னவள் என்னை
பொய் சொல்ல கூடாது என்கிறாளே....!!
- இரா.சுதர்சன்

Tuesday, 20 December 2011

உள்ளொன்று வெய்து புறமொன்று பேசுபவர்களை மதிக்கிறார்கள்..
மனதை திறந்து பேசினால் மிதிக்கிறார்கள்..
ஆறறிவு  கொண்ட ஆட்டுக்குட்டமடா..
மன்னுலகில் மானம்கெட்ட மனிதர்கள்  மிகுதியடா
மாற்றி மாற்றி பேசுவோர்க்குத்தான் மகுடமடா....!!
-இரா.சுதர்சன்
தடைகள் பல வந்தாலும் தகர்த்தெறி..
முட்டுக்கட்டை முந்நூறு வந்தாலும் முறித்தெறி..
தன்னிலை மறந்து செயல் மேல் வை உன் குறி..
எட்டாத வெற்றிக்கநியையும் ஆனந்தமாய் நீ பரி....!!
-இரா.சுதர்சன்
பிடித்தது அவள் மட்டும் இல்லை
பைத்தியமும் சேர்த்து தான்..!
 அவள் உறவுகளுக்கு
என்னை பிடிக்காததினால்....!!
-இரா.சுதர்சன்
தாயின் ரத்ததில் விஷம்..!
நிலத்தடிநீர் மாசு....!!
-இரா.சுதர்சன்
எண்ணத்தின் வெளிப்பாடு செயலில்..!
காதலின் வெளிப்பாடு கவிதையில்....!!
-இரா.சுதர்சன்  
நயவஞ்சகன்..!
ஒவ்வொரு முறையும்
எனக்கு வர வேண்டிய முத்தத்தை
அவனே பெற்றுக்கொள்கிறான்
கயவன் கைபேசி....!!
-இரா.சுதர்சன்
விளங்கவில்லை..!
அதென்ன
பார்வையில் குருட்டுப்பார்வை....??
-இரா.சுதர்சன்

Sunday, 18 December 2011

எதிலும் வெற்றிபெருபவன் கூட
எளிதில் தோற்றுப்போவான்..!
 பெண்ணின்
 போலியான புன்னகையில்....!!
-இரா.சுதர்சன் 
வெயில் கண்ட பனியைப்போல
உன்னை கண்டால் போதும்
என் இதயம்
உருக ஆரம்பித்துவிடுகின்றது...!!
-இரா.சுதர்சன் 
பெண்களுக்கே உரியது
என்று நினைத்து கொண்டிருந்தேன்..!
நீ என்னை
ஒரைக்கண்ணில் பார்த்த போது
என் தலையை கவிழ்த்தியப்பிறகு  தான்
எனக்கு புரிந்தது ஆண்களுக்கும் வரும்
இந்த வெக்கம் என்று....!!
-இரா.சுதர்சன்
கண்டேன்
அவள் கண்கள் பேசும்
கூரான வார்த்தைகளை..!
கோபமாம்....!!
- இரா.சுதர்சன் 
இக்கால மனிதன்
ஒன்று, இரண்டு ருபாய் போய்
 ஐம்பது நூறை சில்லறை என்றான்..!
குணம் இருந்த மனிதர்கள் போய்
பணத்தை மட்டும்
பார்த்து பார்த்து
அவனே சில்லறை ஆனான்....!!
-இரா.சுதர்சன்

Saturday, 17 December 2011

கவிதை எழுத தெரியாத எனக்கு
அவள் நினைவைக்கொண்டு
எதை கிறுக்கினாலும்
கவிதை என்கிறார்கள்....!!
-இரா.சுதர்சன் 
கல்லில் வடித்த
சிற்பத்தின் மேல் வைக்கும் நம்பிக்கையை
கல்லான உன்மேல் வை..!
உன்னை நீயே வடி
வடிப்பதனைத்தும்
சிற்பத்துக்கு மேல்
அழகாக இருக்கும்....!!
- இரா.சுதர்சன் 
என்னவள்
ஒரு களவாணி போல..!
நான் எதிர்பாராத நேரத்தில்
சட்டென்று
என் இதயத்தை
திருடி சென்றுவிட்டால்....!!
- இரா.சுதர்சன் 
அலங்கோலம் கூட
அழகான கோலம் தான்..!
அது என்னவள் கையால்
அவள் வீட்டு
வாசலில் இடும் போது
அறிந்து கொண்டேன்....!!
- இரா.சுதர்சன் 
அங்கே கற்சிலைக்கு பூஜை முடிய,
கோவில் மணியின் ஒலி கேட்டதும்
வெகுண்டெழுந்து புறப்பட்டால் என்னவள்..
ஆத்திரத்தில் அதட்டினேன்
கற்சிலைக்கு கும்பிடு போட
இத்தனை அவசரமா என்று..
விளங்க வைத்தால் என்னவள்
வெள்ளிக்கிழமை வடையும் சுட சுட
சர்க்கரை பொங்கலும் தருவார்களாம்..
சந்தோசம்
என்னவளும் என்னை போல தான் என்று....!!
- இரா.சுதர்சன் 
ஆம் நீ சொன்னதுபோல
குரங்கு தான்
நான் இல்லை என் மனம்..!
உன்னை கண்டால் போதும்
செய்வதறியாது அங்கும் இங்குமாய்
தாவி துள்ளிக்குதிக்கின்றதே....!!
- இரா.சுதர்சன் 
யார் சொன்னது
ஒரே நேரத்தில்
இரு வானவில் தோன்றாதென்று..!
தோன்றிவிட்டதே
அதுவும் ஒற்றை நிறத்துடன்..
என்னவளின் புருவங்களாய்....!!
-இரா.சுதர்சன்
இரு வரிக்கவிதை..!
புன்னகை பூவாக
அவளின் இதழ்கள்....!!
-இரா.சுதர்சன் 
பெண்ணே நீ என்ன பேருந்தா..!
பயணசீட்டின் விலை அதிகரிப்பது போல 
உன் மேல்
நான் கொண்ட காதலும் 
அதிகரித்து கொண்டே போகிறது....!!
- இரா.சுதர்சன் 

Friday, 16 December 2011

நீ பார்க்க
பச்சிலையும் பற்றி எரிய
நான் மட்டும் பற்றாமல் இருப்பேனா..!
பார் உன்னால் நான்
காதல் தீயில் பற்றி எரிவதை....!!
- இரா.சுதர்சன்

பெண்ணே
உன் கண்ணென்ன
கண்ணா இல்லை
கார்பைடு கல்லா ?
உன் கண்களை பார்த்ததும்
கல்லாய் இருந்த என் இதயம்
பட்டென்று பழுத்துவிட்டது....!!
- இரா.சுதர்சன்

நீ மறுத்து விட்டாலும் ..!
வெட்ட வெட்ட
வளரும் நகம் போல
உன்மேல் என் காதல்
வளர்ந்து கொண்டே தான் போகிறது....!!
- இரா.சுதர்சன்


காற்றையும்
சிறை வைக்க கற்றுக்கொண்டேன்..!
என்னை தவிர உன் மூச்சுக்காற்றை
யாரவது சுவாசித்து விட்டால்....!!
- இரா.சுதர்சன் 
நீ மட்டும் இல்லை
என் பேனாவும் காகிதமும்
சேர்ந்து திட்டுகிறது ..!
கவிதைக்கே கவிதையா என்று....!!
- இரா.சுதர்சன்


என் தமிழ்த்தாய் மக்களே....



இன்னும் இப்படியே இருக்க போகிறோமா ?

அநியாயம் கூட நியாயமாகும்

சத்தும் போட்டுத்தான் பார்ப்போம்

என்று நம் கேரளத்து நண்பர்கள்

ஒன்று கூடி குரல் எழுப்புகிரார்களே..

நியாயத்தை வைத்துக்கொண்டு

நாம் ஏன் தான் ஊமையாய் இருக்கின்றோமோ..

இடுக்கி அணைக்கு நீர் வேண்டி

தமிழர்களை இலுச்சவாயன் ஆக்கப்பார்கின்றர்கள்..

தமிழர்கள் நாம் பொருத்தது போதும் பொங்கி எல வேண்டாமா..

ஒன்று கூடுவோம் உரிமைக்காக போராடுவோம்.....!!

- இரா.சுதர்சன்

Thursday, 15 December 2011

பெண்ணே..
புவி ஈர்ப்பு விசையில்
விழுந்தேனோ இல்லையோ..
உன் விழியீர்ப்பு விசையில்
விழுந்து விட்டேன்....!!
- இரா.சுதர்சன் 
என் பெருமூச்சு பெருக்கெடுத்து
என்னுடல் போர்தொடுக்க
துணிந்து விடுகிறது..
என்னவள் அழகை கண்டு
ஆச்சிரியப்படும் எதிரிகளின்மேல்..!
ஹோ
இதற்க்குப்பெர்யர்  தான் பொறாமையோ....!!
- இரா.சுதர்சன்  

Wednesday, 14 December 2011

தேவதைகளுக்கு பூமி வர
அவசியமில்லையாம்..!
அவர்கள்
அனைவருக்கும் பதிலாக
என்னவள் ஒருத்தி போதுமாம்....!!
- இரா.சுதர்சன்


மேஜைக்கு மேல் வாதாடி
மேஜையின் கீழ் வாணிபம்
லஞ்சம்....!!
- இரா.சுதர்சன் 

Tuesday, 13 December 2011

நம்பினார் கைவிடப்படார்..!
வேண்டாம்
நம்பி நம்பி
புரிந்துகொண்டேன்
நம்பிக்கை துரோகிகள் பற்றி....!!
- இரா.சுதர்சன்

நம் தேவை
கிடைக்கவில்லை
போராட்டம்
உரிமைக்காக
தடியடி
ஜனநாயகம்....!!
- இரா.சுதர்சன் 

Monday, 12 December 2011

காலை, இரவு , பகல்
மூன்றை தவிர
இன்னொரு பொழுது
இருந்தால் நன்றாக இருக்கும்
அப்போதும் உன்னையே நினைக்க....!

- இரா.சுதர்சன் 
படிப்பில் முட்டையாம்
ஆசானிடம் அனுப்பாமல்
ஆசாமியிடம் அனுப்புகிறார்கள்
தோஷம் நீங்கி டாப்பாகா வருவானாம்..!
பதரே
தோஷத்தை  பாராமல்
தியேட்டர் வாசலில் இருக்கும்
அவனை பார்
மூடத்தனத்தை நம்பி
வரும் தலைமுறையையும் மூடன் ஆகாதே....!!
புரிந்ததா....
- இரா.சுதர்சன்  
உடம்பெல்லாம்  வலி ..!
எத்தனை முறை தான் சொல்வது உனக்கு
நான் உன் நிழல் என்று....!
இது புரியாது
உன்னை  கோவிலுக்கு யார் போக சொன்னது
எத்தனை பேர் மிதித்தார்கள் தெரியுமா ?  

- இரா.சுதர்சன்



Saturday, 10 December 2011

தந்தை உடலை தந்து
தாயோ உயிரை தர
ஆசான் வளர்க்க நீ வந்தாய்..!
அடே நண்பா உன்னுடன்
எங்கிருந்துதான் வந்தது
இந்த ஜாதியும், மதமும்
மறந்து விடு மறக்க விடு....!!
- இரா.சுதர்சன் 
உன் வாயும் திறக்கவில்லை
என் காதிற்க்கும் எட்டவில்லை..!
ஆஹா என்ன இனிமை - உன்
கண் பேசும் மௌன மொழி....!
- இரா.சுதர்சன்

Friday, 9 December 2011

புரியவில்லை..!
மையிற்கு ஏன் தான் அழகு சேர்க்கிறாலோ
அவள் கண்களில் இட்டு....!!
- இரா.சுதர்சன்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல..!
சரி தான்
என்னவள் தான் வைரம் ஆயிற்றே....!!
- இரா.சுதர்சன் 

Thursday, 8 December 2011

பெண்சாதி
பெற்றெடுக்கும் பிள்ளை
பெண் பிள்ளையாக
வேண்டாமென்று வேண்டுகிறான்
பெண்தெய்வமாம் பார்வதியிடம்....!!
- இரா.சுதர்சன்

மலரபோகும் மொட்டிற்கு
வேர்களினாலேயே மரணமாம்..!
பெண் சிசு கொலை....!!
- இரா.சுதர்சன் 

Wednesday, 7 December 2011

ஒருவருக்கும் தெரியக்கூடாது
தவறுதலாக  செய்யவும்கூடாது..!
பின் அனுபவிப்பார்கள் இறுதிவரை
ஆறாத காயத்துடன் - காதல்....!!
- இரா.சுதர்சன்


பெண்கள்..
கொடுக்க மட்டும் அல்ல
எடுக்கவும் செய்கிறார்கள் - உயிரை
காதல் எனும் பெயரில்....!!
- இரா.சுதர்சன் 

Tuesday, 6 December 2011

ஞாயிறு முன் பனி நில்லாது..!
நீ மட்டும் விதிவிலக்கு
இந்த சூரியன் முன்....!!
- இரா.சுதர்சன் 
நிலவையும் பெண்ணையும் ஒப்பிடுகிறார்கள்
சரி தான்
ஆராய்ச்சி செய்ய செய்ய
அறிய முடியவில்லை எதையும்....!!
- இரா.சுதர்சன்  

Monday, 5 December 2011

என்னை மெலியவன் என்றால்..!
அடி பெண்ணே தெரியவில்லையா உனக்கு
உன்னை நினைத்து உருகியே
மெலிந்து போனேன் என்று....!!
- இரா.சுதர்சன்  
தோல்வியாயினும்
சுகமான சுமையாய்
என் இதயத்தில் நீ....!!
- இரா.சுதர்சன் 

Sunday, 4 December 2011

நிலவும் சுட்டெரிக்கும்
என்று இன்று தான் உணர்ந்தேன்
அவள் இல்லா தனிமையான இரவில் நான்....!!
- இரா.சுதர்சன் 
மதத்தை மறந்த
மனிதனே..
இனத்தை இடித்த
இனியவனே..
சாதியை சிதைத்த
சிற்ப்பியே..
சீர்திருத்தவாதியே..
சுவாமிநாத
சுவாமி நீயே தா..
இரா.சுதர்சனின் வணகங்கள்.....

நரகத்தில் இல்லை
ஆனாலும்
நரக வேதனை
காதல் தோல்வி....!!
- இரா.சுதர்சன் 

Saturday, 3 December 2011

அவள்  பின்னால் அலைந்து
முகவரியை இழந்த எனக்கு
அவளால்  கிடைத்த  முகவரி
என் கன்னத்தில்..!
அவள் கை விரல்களின் வரிகளாக....!!
- இரா.சுதர்சன் 

Friday, 2 December 2011

பூக்கள் அனைத்தும்
தற்கொலை செய்து கொள்கின்றனவாம்
வாடி உதிர்ந்து..!
என்னவள் தலை ஏறா சோகத்தில்....!!
- இரா.சுதர்சன்