தப்பு கணக்கு.....
பொருட்கள் உருளும் சத்தத்தை கேட்ட மணிமேகலை தூக்கத்திலிருந்து கண்விழித்தெழுந்து மின்விளக்கை ஒளிரவிட்டார், மியாவ் மியாவ் என்று மெல்லிய குரலில் கத்திக்கொண்டு மதுவின் செல்லப்பூனை ஓடியது, மணிமேகலை சுவர் கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அதிகாலை நான்கு மணியை காட்டியது உடனே தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் மதுவை எந்திரி கண்ணு பருச்ச இருக்குது நேரமா எழுப்ப சொன்னியே எந்திரி கண்ணு என்று தன் மகனை செல்லமாக எழுப்பினார் மணிமேகலை ம்ம்.... டைம் என்ன மா என்றான் மது நாலாச்சு மது என்றார் மதுவோ பத்து நிமிசம் தூங்கிக்கிறேன் மா அப்புறமா எழுப்பு என்று கூறி மீண்டும் உறங்க ஆரம்பித்தான்,பத்து நிமிடதிர்க்குப்பிறகு மணிமேகலை மதுவை எழுப்ப மதுவோ ரெண்டு நிமிசம் தா தூங்குனேன் அதுக்குள்ள பத்து நிமிசம் ஆயிடுச்சா என்ன கொடுமடா சாமி இது என்று கட்டிலில் படுத்தவாறே அரை தூக்கத்தில் புலம்பிக்கொண்டு அம்மா டீ மா என்றான், அஞ்சு நிமிசம் கொண்டு வந்து தரேன் நி அதுக்குள்ள படிக்க ஆரம்பி கண்ணு என்று கூறி சமயலறைக்குள் சென்றார் மணிமேகலை,
கணக்கு, அனைத்துப்பாடங்களிலும் எப்படியோ தேறிவிடும் மது கணக்கு பாடத்தில் மட்டும் கொஞ்சம், இல்லை இல்லை மிகவும் மட்டம் தான், கணக்கு புத்தகத்தை புரட்டி புரட்டிப்பார்த்தான் மது ஒன்றும் விளங்கா நிலையில் இதமாய் குளித்துவிட்டு பதமாய் சிற்றுண்டியையும் முடித்துவிட்டு மா நா பள்ளி கூடத்துக்கு போயிட்டு வரேன் மா என்று மணிமேகலையிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டான் மது,
பள்ளியின் விளையாட்டு திடலில் சிரித்து பேசிக்கொண்டிருந்த தன் நண்பர்கள் சரவணன் மற்றும் கிரிதரின் அருகே சென்ற மது, என்னடா சந்தோசமா சிருச்சு பேசிட்டு இருக்கீங்க, நல்லா படுச்சுட்டு வந்துடீங்க போல ராஸ்கல்ஸ் ம்ம் நடத்துங்கடா நடத்துங்க என்று கூறிக்கொண்டே நண்பர்கள் படித்து வந்து விட்டார்களே என்று சற்று மன வேதனையுடன் வகுப்பறை நோக்கி சென்றான் மது, வகுப்பின் முகப்பருகே தனது நெருங்கிய நண்பர்களான மோகன், நிஷா, அசோக், அன்னபூரணி மற்றும் சசி ஆகியோர் முகம் தளர்ந்தது அமர்ந்துக்கொண்டிருக்க அவர்களின் அருகே சென்ற மதுவிற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது நண்பர்களின் முகங்கள், நண்பர்களுடன் சேர்ந்து அமர்ந்த மது சந்தோசமாக என்னடா எல்லாரும் எதையோ தொலச்சுட்டு உக்காந்து இருக்கீங்க போல என்று கேட்க மோகனோ எதுவுமே படிக்கலடா மாமா பெயில் ஆயிருவோமொனு பயமா இருக்கு பொண்ணுக முன்னாடி மானம் போக போகுதுடா மாமா என்று வருத்தத்தோடு கூற மதுவின் மனமோ பட்டாம்பூச்சி போல பட படவென பறந்தது முகம் புதிய மலரைப்போல மலர்ந்தது, டேய் மோகன் நீ தா நல்லா படிக்குற பையனாச்சே நீயே இப்புடி சொன்ன எப்புடி டா என்று கூறி வருந்துவதைப்போல் நண்பன் படிக்கவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொண்டான் மது, நீ சந்தோசமா இருக்குறத பாத்தா நல்லா படுச்சுட்டு வந்துருப்ப போல என்ன விசயம் மது என்றால் அன்னபூரணி , இல்ல பூரணி நானும் படிக்கல எனக்கு கம்பெனிக்கு ஒரு ஆள் கூட இல்லையேனு நெனச்சேன் ஆனா இங்க தா ஒன்னுக்கு அஞ்சு பேர இருக்கீங்களே அதான் சந்தோசமா இருக்கேன் ஹா ஹா ஹா ஹா என்று மது வாய்விட்டு சிரிக்க டேய் வாய்குள்ள கொசு போயரபோகுது கொஞ்ச மூடுங்க சார் என்றான் அசோக், சிரிப்பை சற்று அடக்கிய மதுவிடம் ஏன்டா பெயில் ஆயிட்ட பொண்ணுக முன்னாடி மானம் போகுமுன்னு கூட இல்லாம எப்புடி டா இப்புடி சிரிக்கிற என்றான் சசி பின்ன எம்மானம் மட்டும் போன சங்கடப்படலாம் படிக்கிற பசங்க உங்க மானமும் என்கூட சேந்து போக போகுதுன்னு நெனைக்கும் போது ரொம்ப பெருமையா சந்தோசமா இருக்குடா சசி நம்மதான்டா உண்மையான இணைபிரியா நண்பர்கள் என்றான் மது சிரித்துக்கொண்டே,
பள்ளியின் விளையாட்டு திடலில் சிரித்து பேசிக்கொண்டிருந்த தன் நண்பர்கள் சரவணன் மற்றும் கிரிதரின் அருகே சென்ற மது, என்னடா சந்தோசமா சிருச்சு பேசிட்டு இருக்கீங்க, நல்லா படுச்சுட்டு வந்துடீங்க போல ராஸ்கல்ஸ் ம்ம் நடத்துங்கடா நடத்துங்க என்று கூறிக்கொண்டே நண்பர்கள் படித்து வந்து விட்டார்களே என்று சற்று மன வேதனையுடன் வகுப்பறை நோக்கி சென்றான் மது, வகுப்பின் முகப்பருகே தனது நெருங்கிய நண்பர்களான மோகன், நிஷா, அசோக், அன்னபூரணி மற்றும் சசி ஆகியோர் முகம் தளர்ந்தது அமர்ந்துக்கொண்டிருக்க அவர்களின் அருகே சென்ற மதுவிற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது நண்பர்களின் முகங்கள், நண்பர்களுடன் சேர்ந்து அமர்ந்த மது சந்தோசமாக என்னடா எல்லாரும் எதையோ தொலச்சுட்டு உக்காந்து இருக்கீங்க போல என்று கேட்க மோகனோ எதுவுமே படிக்கலடா மாமா பெயில் ஆயிருவோமொனு பயமா இருக்கு பொண்ணுக முன்னாடி மானம் போக போகுதுடா மாமா என்று வருத்தத்தோடு கூற மதுவின் மனமோ பட்டாம்பூச்சி போல பட படவென பறந்தது முகம் புதிய மலரைப்போல மலர்ந்தது, டேய் மோகன் நீ தா நல்லா படிக்குற பையனாச்சே நீயே இப்புடி சொன்ன எப்புடி டா என்று கூறி வருந்துவதைப்போல் நண்பன் படிக்கவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொண்டான் மது, நீ சந்தோசமா இருக்குறத பாத்தா நல்லா படுச்சுட்டு வந்துருப்ப போல என்ன விசயம் மது என்றால் அன்னபூரணி , இல்ல பூரணி நானும் படிக்கல எனக்கு கம்பெனிக்கு ஒரு ஆள் கூட இல்லையேனு நெனச்சேன் ஆனா இங்க தா ஒன்னுக்கு அஞ்சு பேர இருக்கீங்களே அதான் சந்தோசமா இருக்கேன் ஹா ஹா ஹா ஹா என்று மது வாய்விட்டு சிரிக்க டேய் வாய்குள்ள கொசு போயரபோகுது கொஞ்ச மூடுங்க சார் என்றான் அசோக், சிரிப்பை சற்று அடக்கிய மதுவிடம் ஏன்டா பெயில் ஆயிட்ட பொண்ணுக முன்னாடி மானம் போகுமுன்னு கூட இல்லாம எப்புடி டா இப்புடி சிரிக்கிற என்றான் சசி பின்ன எம்மானம் மட்டும் போன சங்கடப்படலாம் படிக்கிற பசங்க உங்க மானமும் என்கூட சேந்து போக போகுதுன்னு நெனைக்கும் போது ரொம்ப பெருமையா சந்தோசமா இருக்குடா சசி நம்மதான்டா உண்மையான இணைபிரியா நண்பர்கள் என்றான் மது சிரித்துக்கொண்டே,
மாணவ மாணவிகள் பரபரப்பாக பரிட்சைக்கு படித்துக்கொண்டிருக்க மணி ஒன்பது பதினைந்தை தொட பரிட்சை அறைக்கு செல்ல மணி ஒலித்தது மதுவும் அவனது நண்பர்களும் தங்களின் முகங்களை மாறி மாறி பார்த்துக்கொண்டு பரிட்சை அறைக்குள் சென்று பரிட்சை எண்னை சரிபார்த்து அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தனர் தனது முன் இருக்கையில் அமர்ந்திருந்த நன்றாக படிக்கும் தன் மாமன் மகளான அஞ்சலியிடம் என்ன அஞ்சு நல்லா படுச்சுட்டு வந்தியா பருட்சைய நீ நல்லா எழுதுனாதா மாமா பாஸ் பண்ணமுடியும் புருஞ்சுச்சா, உனக்கு புருஞ்சுருக்குமுன்னு நெனைக்கிறேன் என்றான் சற்று பவ்வியமாக,டேய் மாமா இது எக்சாம் ஹால் கொஞ்ச பேசாமதா இரேண்டா எழுதும்போது கண்டிப்பா ஏன்சர் சீட்ட காமிக்கிறேன் போதுமா என்றால் அஞ்சு, மாமா மேல எம்புட்டு பாசம் என் செல்லத்துக்கு என்று கூறி புன்னகைத்துக்கொண்டான் மது, மணி ஒன்பது முப்பதாக சில நிமிடங்களே இருந்த நிலையில் பரிட்சையறைக்கு எந்த ஆசிரியரும் வராத நிலை, மதுவும் அவனது நண்பர்களை தவிற அனைவரும் சற்று பதட்டமாகவே இருந்தனர் மணி ஒன்பது முப்பதை தொட்டது பள்ளியின் அருகே ஒரு தொழிற்சாலையில் இருந்து சங்கு சத்தம் ஒலித்தது என்னடா இது பருட்சை எழுத்தருக்கு முன்னாடியே ரிசல்ட சொல்றானுகளே என்று சொல்லி மதுவும் அவனது நண்பர்களும் ஒருவரை ஒருவர் முகங்களை பார்த்து சிரித்துக்கொண்டிருக்க, தமிழ் ஆசிரியர் பிரபு கேள்வித்தாள்களை பரிட்சையறைக்குள் எடுத்து வந்தார் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் அய்யா என்று சொல்லி அமர்ந்தனர், ஆசிரியர் பிரபுவை பார்த்ததும் அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக மதுவும் அவனது நண்பர்களுக்கும் மிகுந்த சந்தோசம், காரணம் பிரபு அமைதியான இடமொன்று கிடைத்தால் போதுமென்று சற்று இளைப்பாரிக்கொள்பவர் பரிட்சையறை அமைதியாக இருப்பதினால் அங்கும் அவர் தூங்குவதை வழக்கமாக கொண்டவர், எனவே அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர், பிரபு கணக்கு வினாத்தாள்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார், வினாத்தாளை வழங்கிவிட்டு யாரும் பிட் அடிக்கக்கூடாது மீறி பிட் அடுசீங்கன்னு தெருஞ்சுது பேப்பர கிளுச்சு வீசிட்டு வீட்டுக்கு அனுபுச்சுருவேன் பாத்துக்குங்க என்று ஏக வசனத்தை பேசி சிறிது நேரம் அங்குமிங்குமாய் பரிட்சையறையில் நடந்துவிட்டு ஆசிரியர்களுக்காக ஒதுகப்படிருந்த நாற்காலியில் அமர்ந்தார், மதுவின் கால்களில் கொசுக்கடிக்க சற்று குனிந்து சொரிந்துக்கொண்டன் மது , அதை பார்த்த பிரபு என்னவேணும் மது என்றார், ஒனுமில்லயா என்றான், என்ன என்ன சொன்ன சொல்லு என்றார் பிரபு, ஒன்றுமில்லை கொசு கடித்துவிட்டது அய்யா என்றேன் அய்யா என்றான் மது கிண்டலாக, பிரபுவும் நாற்காலியில் அமர்ந்தவாரே தூங்க ஆரம்பித்தார், பிரபு தூங்க ஆரம்பித்ததும் அஞ்சுவை பார்த்து தேர்ச்சியாகும் அளவிற்கு மட்டும் விடையளித்தான் மது, மதுவின் நண்பர்களாகிய மோகன்,நிஷா, அசோக்,அன்னபூரணி மற்றும் சசியும் அருகிலிருந்தவர்களை பார்த்து நல்லதொரு மதிப்பெண் பெருமளவிற்கு எழுதினார்கள், மணி பன்னிரெண்டை தொட்டது பரிட்சைகான நேரம் முடிவடைந்ததும் விடைத்தாள்களை சேகரிக்க ஆரம்பித்தார் பிரபு விடைத்தாள்களை சமர்பித்துவிட்டு மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர் எதோ போரில் வெற்றி வாகை சூடிய வீரர்களைப்போல,
மதுவும் நண்பர்கள் மோகன்,நிஷா,அசோக்,அன்னபூரணி மற்றும் சசியும் வக்குப்பறையை விட்டு வெளியே செல்ல, நட்புகளே பருட்சை எப்புடி இருந்துச்சு? பயந்துட்டே இருந்தோம் ஆனா பாதீங்களா எவ்வளவு சப்பையா முடுஞ்சுபோசுன்னு அதான் எப்பவுமே பாசிட்டிவா திங்க் பன்னனுமுன்னு சொல்றது என்று மது பேச்சை தொடங்க ஆமாண்டா மாமா நா அறுபது மார்க் வாங்கிருவேன் போலடா அன்போட பேப்பர பாத்து நல்லா எழுதிருக்கேன்டா என்று மோகன் கூற நா பாஸ் ஆகுற அளவுக்குதாண்ட எழுதுனேன் நா நெறைய மார்க் வாங்குனேன்னா இவ எப்புடி இவ்வளவு மார்க் வாங்குனானு தேவையில்லாத சந்தேகம்தான்டா வரும் அதனாலதா என்று மதுக்கூற டேய் மது அப்ப தப்ப சரியா பன்னிட்டு வந்துருக்கேன்னு சொல்லுடா என்றான் அசோக், ஹா ஹா அரசியல்ல இது எல்லாம் சாதாரணம்டா அசோக் என்றுபேசிக்கொண்டே பேருந்து நிலையத்தை நோக்கி நடையை ஆரம்பிக்க மதுவின் முதுகில் செல்லமாய் ஒரு அடி விழுந்தது அது தன் மாமன் மகள் அஞ்சலியென்று திரும்பிப்பார்க்க அது மணிமேகலை, ஆச்சிரியத்தில் மது சத்தமாக அம்மா !! நீ எங்க இங்க என்றான் , டேய் கண்ணு உனக்கு என்னடா ஆச்சு எந்திரி அம்மா உனக்கு டீ கொண்டுவந்துருக்கேன் போய் பல்லு தேச்சுட்டு வந்து டீய குடுச்சுட்டு நல்லா படி, இங்கப்பாரு கால்ல கொசு எப்புடி கடுச்சுருக்குன்னு இது கூட தெரியாம அப்புடி என்னதான் தூக்கமோபோ என்று கூறிக்கொண்டு வாசலை சுத்தம் செய்ய கிளம்பினாள் மணிமேகலை,
அப்ப நா கணக்கு பரிட்சை எழுதி முடுச்சுட்டு வந்தது எல்லாமே கனவா !! அய்யகோ கடவுளே என்னடா இது விளையாட்டு என் பரிட்சைக்கூட என்று புலம்பிக்கொண்டு கணக்கு புத்தகத்தை எடுத்தான், தேநீர் குடித்தவாறே கணக்கு குறிப்பெழுதிய புத்தகத்தையும் எடுத்து புரட்டி புரட்டிப்பார்த்தான் மது ஒன்றும் விளங்காமல் பள்ளிக்கு நேரமான நிலையில் இதமாய் குளித்துவிட்டு பதமாய் சிற்றுண்டியையும் முடித்துவிட்டு மா நா பள்ளி கூடத்துக்கு போயிட்டு வரேன் மா என்று மணிமேகலையிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டான் மது, பள்ளியின் விளையாட்டு திடலில் சிரித்து பேசிக்கொண்டிருந்த தன் நண்பர்கள் சரவணன் மற்றும் கிரிதரின் அருகே சென்ற மது, என்னடா சந்தோசமா சிருச்சு பேசிட்டு இருக்கீங்க, நல்லா படுச்சுட்டு வந்துடீங்க போல ராஸ்கல்ஸ் ம்ம் நடத்துங்கடா நடத்துங்க என்று கூறிக்கொண்டே நண்பர்கள் படித்து வந்து விட்டார்களே என்று சற்று மன வேதனையுடன் தனது நண்பர்களான மோகன்,நிஷா அசோக், அன்னபூரணி மற்றும் சசி ஆகியோரை நோக்கி வகுப்பறைக்கு சென்றான் மது....!!
-இரா.சுதர்சன்