என் இதயதில்
உன்னை வைக்கவே
பயமாக இருக்கிறது..
என் இதய துடிப்பில்
உன் இரவு தூக்கம் களைந்து விடுமோ என்று..!!
- இரா.சுதர்சன்
இதய கூட்டில் எழுதி வைத்தேன்
யாருக்கும் இடம் இல்லை என்று..
இருந்தும் உள்ளே நுழைந்தாய்
எனக்கு படிப்பறிவு இல்லை என்று....!!
- இரா.சுதர்சன்
பூவிளிருந்தும் புயல் காற்று..!
என்னவளின் கோவ பெருமூச்சு....!!
- இரா.சுதர்சன்
Monday, 28 November 2011
பூக்கள் கண்ணீர் சிந்துமா ?
சிந்துகின்றது..
உன் தலை ஏறா சோகத்தில்..
அதிகாலை
பனித்துளியின் உதவியுடன்....!!
- இரா.சுதர்சன்
முந்தி முந்தி போனான்
முன்னேற
முந்தி தான் போனான்
மரண படுக்கைக்கு..!
மித வேகம் மிக நன்று....!!
- இரா.சுதர்சன்
Sunday, 27 November 2011
பெண்னே..
உண்மையில் நீ ஒரு கள்ளி தான் - ஆம்
உன்னை துரத்தி துரத்தி காதல் செய்ததற்க்காக
ஒரு பார்வையில் என்னை கொலை செய்யும்
காதல் கள்ளி..!
- இரா.சுதர்சன்
Saturday, 26 November 2011
நான்
விரும்பியதெல்லாம் அதிதூரத்தில்..
நினைவறிவதர்க்கு முன் நிலா....
நினைவறிந்த பின் நீ....!!
- இரா.சுதர்சன்
Friday, 25 November 2011
நான் எழுதியது வார்த்தைகள் தான்
ஆனால் அதை
நீ வாசிக்கும் போது மட்டும்
கவிதயகிவிடுகிறது ஏனோ....!!
இது தான் காதலா ??
- இரா.சுதர்சன்
கருப்பு நிலவை பார்த்தேன்
ஒன்றல்ல இரண்டாய்
பார்த்ததும் ஈர்க்கப்பட்டேன்
காந்ததிடம் இரும்பை போல..
அடடே
என்னவளின்
இரு கருவிழிகளா அது....!!
- இரா.சுதர்சன்
மின்னல் சிரிக்க
இடி கைகொட்ட
மேகம் மட்டும் ஏன் தான்
கண்ணீர் சிந்துகின்றதோ..
அனந்த கண்ணீராய் இருக்கும் போல - பின்
நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் நடந்தால் !!
- இரா.சுதர்சன்
என்னவளே
கொஞ்சம் மெதுவாய் நட..
என்னை அறியாமலே
என் இதயம்
சுரம் பாட ஆரம்பித்துவிடுகிறது !!
உன் கால் கொலுசொலியின் ஜதி கேட்டு......
- இரா.சுதர்சன்
Tuesday, 22 November 2011
நிலா........
உடைந்து
உதிர்ந்திருக்கும் போல !
பின் அவள் எப்படி
பூமியில்......!!
-இரா.சுதர்சன்
போலியாக நான் !!
என்னவள் அவளுள்
என்னை காண்கிறாலாம்
காதல் கண்ணாடியில்.....!
-இரா.சுதர்சன்
Monday, 21 November 2011
புரியாத
புதிராய்..
நீ
நான்
ஜாதி
மதம்
மொழி,,,,,
கலை
நிலை
மனிதனை
மனிதனாய்
பார்
பாரில்.......
- இரா.சுதர்சன்
Sunday, 20 November 2011
கவிதையே
என் கவிதையை
ரசிக்கின்றது..
கவிதைக்கு காரணம்
யார் என்று புரியாது....
-இரா.சுதர்சன்
முதல் முறையாய்
மின்சாரத்தை உணர்ந்தேன்
என்னவள் மின்னல் பார்வையில்..
அருகில் இருந்த அவள்
தோழியை பார்த்ததற்கு.....
ஹும்ம் எவ்வளவு பொறாமை ..
-இரா.சுதர்சன்
Saturday, 19 November 2011
ஏ பெண்ணே !!
உன் கண் என்ன காந்தமா ?
திசை காட்டிக்கூட
உன்னையே காண்பிக்கிறது....
- இரா.சுதர்சன்
ராகமில்லை தாளமில்லை
ஆனாலும்
ரசிக்கின்றான் - அலுவலகத்தில்
ஏற்ற இறக்கத்துடன்
உண்ட மயக்கத்தில்
மதிய தூக்கம்....!!
- இரா.சுதர்சன்
ஐயோ !!
என்ற சத்தத்துடன்....
சொர்கத்துக்கு செல்லும் வழியில்
திடிர் தடங்கல்..
தலையில் குட்டு
ஆசிரியரின் கையில் ,
வகுப்பு நேர தூக்கத்தில்
மண்டை வலியுடன்
மாணவன்....!!
- இரா.சுதர்சன்
Friday, 18 November 2011
பலரிடம் சில
பொய்களை சொன்னேன்
அதற்காக என் மனம்
ஒரு போதும் ஏங்கவில்லை..
ஆனால்உன்னிடம்
ஒரே ஒரு உண்மையை
சொல்ல முயற்சிக்கிறேன்
முடியவில்லை
மன ஏக்கத்துடன்......
- இரா.சுதர்சன்
கூட்டி கூட்டி பார்கின்றேன்
கூடவில்லை
கழிந்துதான் போகிறது
வருத்தத்தில்.....
வீட்டின் மூலையில் துடைப்பம்
- இரா.சுதர்சன்
Thursday, 17 November 2011
கண்கள் தீண்டி மனது பேசும் பாசை காதல்..
உடல் தீண்டி வாய் பேசும் பாசை காமம்.....
- இரா.சுதர்சன்
Wednesday, 16 November 2011
சோர்வினை களைந்து
சோகத்தினை மறந்து
நிம்மதி பெருமூச்சை விட்டு
நாளை வரும்
நலனை எண்ணி
நன்றாய் கண்ணுறங்கு
நல்ல கனவுகளுடன்
இரவின் மடியில்
இனிய இரவு..........
- இரா.சுதர்சன்
தரிசு நிலத்தில்
அமோக விளைச்சல்.....
காதல் உரத்தை
போட்டு
என் கண்ணீரை
நீராக மாற்றி - என்னவள்
வளர்க்க வைத்த
தாடி........ :-(
- இரா.சுதர்சன்
புத்தம் புது மொழி
புரியாத மொழி
தேன் போல சுவையாய்
கேட்க கேட்க சுகமாய்
மனதில் கள்ளமில்லா - இந்த
மழலையின் மொழி.......
- இரா.சுதர்சன்
Tuesday, 15 November 2011
சந்தேகத்தை உருவாக்கி
உயிரையும்
பிடுங்கவைத்துவிடுகிறான்
இந்த கயவன்
கைபேசி.......
- இரா.சுதர்சன்
முட்டி மோதி பார்கின்றேன்
எட்டு திக்கும் சுழல்கின்றேன்
விடுதலை வாயில் எங்கே என்று..!
ஏக்கத்துடன் கடிகார முற்கள்....!!
- இரா.சுதர்சன்
Monday, 14 November 2011
மனதில்
காதல் கோட்டையை
கட்டாதீர்கள் - ஏனென்றால்
ஒவ்வொரு கட்டிடத்துக்கும்
ஒரு எக்ஸ்பயர் டேட் உண்டு ;-)
- இரா.சுதர்சன்
இக்கால இளைஞர்கள் சிலர்
கிளியையும் கோலையும் கொண்டு
தங்களின் எதிர்காலத்தை கணிக்கிறார்கள்
நல்லது - அப்படியே
கலாமிற்கு கணித்துசொல்லுங்கள்
2020 இல் இந்திய
வல்லரசு ஆகுமா என்று....!!
- இரா.சுதர்சன்
அவர் காட்டுகிறார் பாரபட்சம்
பிறப்பு முதல் இறப்பு வரை......
பாரபட்சம் காட்டாதவர்களை
அவர் என்கிறார்கள் - ஆனால்
அவரை மட்டும் தான்
பாரபட்சம் இன்றி பார்க்க முடிந்தது
இன்றோ
அதற்கும் பெயரிட்டார்கள்
பொது வழி, சிறப்பு வழி என்று....
அவர் இருக்கிறார் எனில்
அனைத்திலும் பாரபட்சம் எதற்கு ??
இல்லை என்றால் அவர்களுக்கு
வீதி தோறும் விடுதிகள் எதற்கு ????
- இரா.சுதர்சன்
Saturday, 12 November 2011
சூரியனை ராவிலும் உறங்க விடாமல் திக்காட செய்து ஹைக்கூ எழுத வைத்தவள் இந்த தேவதை.... - இரா.சுதர்சன்
பூவிற்கு கூட
தலை கணம் -ஆம்
அவள் பின்னல் நான்
அலைவதை பார்த்து
இதழ் விரித்து சிரிக்கிறது....!!
ம்ம்ம்ம்
- இரா.சுதர்சன்
முகத்தை காட்ட
மறுக்கிறார்கள் - ஆனால் அவர்கள் முகபுத்தகத்தின் (face book) உறுப்பினர்கள்....!!
லஞ்சம் வாங்கிய உத்தமன் போல ;-) ஏன் தா இப்புடி பண்றீங்களோ !! - இரா.சுதர்சன்
என்னதான் ஆனந்தமோ
பூமித்தாய்க்கு இப்படி
வாய் விட்டு சிரிக்கின்றால் - மனிதன்
உயிர் விட்டு போக
நிலநடுக்கமாய்....!
- இரா.சுதர்சன்
Friday, 11 November 2011
விண்மீன் என பறிக்க சென்று
வாங்கிக்கட்டிக்கொண்டேன் என்னவளிடம்
அது அவளின் கண்கலாம்.......
ம்ம்ம்ம்ம்ம்ம்
- இரா.சுதர்சன்
கடவுள்தெரிந்தேவைத்தான்
ஒருதிருஷ்டிபொட்டு - நிரந்தரமாய்
என்னவள்நெற்றிஓரமச்சம்....!!
- இரா.சுதர்சன்
Thursday, 10 November 2011
யோகியனயும் அயோகியனாக்கிவிட்டது
இந்த காதல் - ஆம்
என்னவளின் இதயத்தை திருடவைத்து
எனையோர் திருடனாக்கி....!!
- இரா.சுதர்சன்
நாள் முழுவதுமாய்
ஓடிப்பார்க்கிறேன் முன்னேறுவதற்காக
முடியவில்லை.....
முனங்கள் சத்தத்துடன்
மின்விசிறி....!!
- இரா.சுதர்சன்
Wednesday, 9 November 2011
இமைகளே
கண்களை காயப்படுத்துகின்றன,
முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவைத்து.....
(இமைகளாக பிள்ளைகளும், கண்களாக பெற்றோர்களும்)
- இரா.சுதர்சன்
அளவில்லாமல் நேசித்தேன் - ஆம்
அனுபவிகின்றேன், மறந்தேன்
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சென்று..!
- இரா.சுதர்சன்
Tuesday, 8 November 2011
காதலித்தேன்
கவிஞனானேன்
கண்ணீர்கலந்த
கவிதைகளுடன்....
- இரா.சுதர்சன்
உண்மைதான் - அவள்
நினைவில் நான்
கிறுக்கும் கிறுக்களைகூட
கவிதை என்கிறார்கள்..!!
- இரா.சுதர்சன்
Monday, 7 November 2011
நுரையீரலை மட்டும் அல்ல
ஓசோநயும் ஓட்டையாகத்தான்,
இழுக்க இழுக்க ஆனந்தம்
இறுதிகட்டம் ஆரம்பம்,
சிறிது சிறிதாய்
சிதைக்கும் சிகரேட்
கேன்சர் ஜாக்கிரதை.....!!
- இரா.சுதர்சன்
Sunday, 6 November 2011
பொய்களின் பிறப்பிடம் - கற்பனை
கற்பனைகளுக்கு காரணகர்தா - காதல்
காதலின் ஆரம்பம் - முற்றும்
முற்றிலும்....!!
- இரா.சுதர்சன்
Saturday, 5 November 2011
கண்களால் செய்யாதே - ஒரு நாள் அதே கண்களால் வடிப்பாய் அர்த்தமின்றி.....!! - இரா.சுதர்சன்