Saturday, 29 June 2013

காதல் தோல்வியின் வலியை கூட தாங்கி விடலாம் போல....
இன்ட்ரஸ்டா  படம் பாத்துட்டு இருக்கும் போது ஒரே இடத்துல திரும்ப திரும்ப கொசுக்கடிக்குற வலிய தாங்கக முடியல !!

கடைக்கு போய் ஊதுபத்தி பத்த வைக்க ஒரு தீபட்டியும், தயிருக்கு கடுச்சுக்க ஒரு சிப்ஸ் பக்கெட்டும் வாங்கிட்டு வந்தது ஒரு தப்பா ? !!

# சனிக்கிழமனு சொன்னாலே ஒரு சந்தேக பார்வையாதான் பாக்குறாங்கயா ;-) :p 

ஹாப்பி வீக்என்டு ப்ரெண்ட்ஸ்.........

Friday, 28 June 2013

நாகரீக மாற்றம் என்ற பெயரில் அவ்வப்போது அநாகரீகம் அடியெடுத்து வைக்கிறது.......!

# நி(சு)தர்சனம்

Thursday, 27 June 2013

எங்கள் அலுவலக வாகன ஓட்டுனர் ( கிட்ட தட்ட என் வயசு ), இரவு பணியில் (அதாவது இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ) ஒரு சிறிய கடையருகே வண்டியை நிறுத்திவிட்டு தமிழக அரசால்  தடை செய்யப்பட்ட ஒரு பாக்கை (2 பாக்கெட்டு) வங்கி வாயில் போட்டு மென்று கொண்டே வண்டிய கிளப்புனாறு, நானும் கவர்மெண்டே பாக்கு போட்ட கேன்சர் வருதுன்னு தடை பன்னிடுச்சு பத்தாததுக்கு சினிமா தியேட்டர்ல என் பேரு முகேஷ் பாக்கு போட்டு போட்டு எனக்கு வாய்ல கேன்சர் அது இதுனு காமிக்கிகுறான், இப்புடியே  பாக்கு போட்ட கொஞ்ச நாளுல கேன்சர் வந்து செத்துருவையா இதெல்லாம் போடாதனு சொன்னேன்..... கொஞ்ச சைலெண்டா இருந்துட்டு சொன்னான், சார் இப்ப இது போடாட்டி வண்டி ஓட்ட ஓட்ட எனக்கு தூக்கம் வந்துரும்.... அப்புடி வராது இன்கேஸ் வந்தா கொஞ்ச நாள் இல்ல இப்பவே போகவேண்டியது தா, அதுவு வண்டில நான் மட்டு இல்ல  நீங்க வேற இருக்கீங்கனு சொன்னான்.....

#  என்னா பேசறதுன்னு தெரியாம வாய மூடிகிட்டு உக்காந்துட்டேன் எல்லாம் நேரம் ஹும்ம்ம்ம்ம்ம் !! 

Wednesday, 26 June 2013

லோகத்துல மழைக்கு வேண்டி எதேதோ யாகம் வளர்துறேலே சத்த அது கூட பத்து மரத்தையும் சேர்த்து வளதுப்பாருங்கோ., யாகம் மழை தர்றதோ இல்லையோ மரம் கண்டிப்பா தரும்....!!

மரம் வளர்ப்போம் மழை வளம் காப்போம்.......

Thursday, 20 June 2013

சில சமயங்களில் கடவுளை கூட சபிக்கத்தான் தோன்றுகிறது, ஆயினுமோர் நல்ல விசயம் தன்னம்பிக்கை துளிர தூண்டுகோலாய் இருப்பது.......!!

Wednesday, 19 June 2013

சில சமயங்களில் கண் முன்னே நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க முடியாமல், நானும் பச்சையான வார்த்தைகளை முனு முனுதுக்கொண்டே போய்விடுகிறேன்......!!
எவன் ஒருவன் நமக்கு சாதகமாக ஒரு செயலை செய்கிறானோ, நம் தவறுகளை தட்டிக் கேட்காமல் விட்டு விடுகிறானோ நாம் செய்யும் செயலைப் பார்த்து  இது மட்டுமே சரி என்று நம்மை புகழ்கிறானோ,,
அவன் மட்டுமே நம் கண்களுக்கு நல்லவனாய் தெரிவான்....!!

# நி(சு)தர்சனம்..

Tuesday, 18 June 2013

அடடே..!
உன்னை பார்த்துக் கொண்டே இருந்தால்
நேரம் வேகமாக சென்று விடுகிறதென்று
இப்போதெல்லாம் என் கை
கடிகாரத்தைக் களைந்து விடுகிறது....!!
-இரா.சுதர்சன் 

Friday, 14 June 2013

பாவம் என்னை கடிக்க வரும் கொசுக்களுக்கு தெரியவில்லை நாளை அதுகளுக்கு மில்க் என்று........

ஹேவ் எ கொசுக்கடி நைட் !! அவ்வ்வ்வ்வ்வ்வ்