Friday, 25 March 2016

நிழல்.. (நித்திரையும் - நண்பனும், பகுதி - 4, ஒளி - 3)

விரிந்த தாமரை போல் பிரகாசமாய் புன்னகைக்கும் பௌர்ணமி இரவு அது, வயிற்றுப் பிழைப்பிற்க்காக வேறு வழியின்றி வெளியூரில் வேலைபார்த்து வந்தவன், உயிரான நண்பனோடு காற்றாடகயிற்றுக்கட்டிலில் படுத்தவாறே கதை பேசிகொண்டிருந்தான், தூரத்தே மெல்லியதோர் தேன் குரலில் அவன் பெயர் இரு முறை ஒலிக்க, ஒரு நிமிசம் இருடா யாரோ என்ன கூப்டுற மாதிரி இருக்கு பாத்துட்டு வரேன் எனக்கூறி  முற்றத்தை நோக்கி விரைவாக மூன்றாமடி எடுத்து வைக்க கால்கள் இடறி அம்மா... என்று அலறிக்கொண்டே  கீழே விழுந்தான், பதறிப்போன தாயோ வேகமாய் அருகே வந்து, பாத்து நிதானமா போக கூடாதா என பச்சிளம் குழந்தையை போல தோள்களை பிடித்து தூக்கியவாரே அடி கிடி ஏதும் பட்டுருச்சாப்பா ? என்று வினவ இல்லமா அடி எதும் படல என்றான், அவனது நண்பனோ என்னடா உளற என சற்றே அதட்ட, கட்டிலில் இருந்து கீழே  விழுந்ததை உணர்ந்த அவனின் தூக்கம் களைந்தது போல தற்காலிக சொர்கமும் ! விரிந்த தாமரை போல் பிரகாசமாய் தாங்கி பிடித்த நண்பனின் கைகளை தவிர !!

- இரா.சுதர்சன்