Saturday, 30 March 2013

உலகம்..

செய்ததை நன்றென்று சொல்ல
இருவர் இல்லையெனினும்
கவலைப் படாதே..!
பிழை சொல்ல
மூவர் இருப்பார்கள்....!!
-இரா.சுதர்சன்

Saturday, 16 March 2013

பொய்யான வாழ்க்கை
வாழும் இந்த பூவுலகில்..
மெய்யாக இரு
உனக்கு மட்டுமாவது....!!
-இரா.சுதர்சன்

Wednesday, 13 March 2013

நெருங்கும் போது
விலகி செல்லும் நீ..
விலகி நின்று
உன்கண்களால் மட்டும்
நெருங்குவதேனோ....!!
-இரா.சுதர்சன் 
பருவநிலையை போல 
இந்த காதலும் 
மாறித்தான் வருகின்றது..
தெளிந்த இதய அறையில் 
ஆரம்பித்தது அன்று..!
இருட்டு சுவற்றறையில் இன்று....!!
-இரா.சுதர்சன் 

Saturday, 2 March 2013

தவறுகள் தவறில்லை
தவறுகளை தவிர்க்காமல்
தொடர்ந்து தவறிளைப்பதே
தவறு..!!
-இரா.சுதர்சன் 
எங்கே அவர் ?
யார் இவர் ?
கேளா செவிகள்
பார விழிகள்
பன்னீரு கரங்கள்
பலமான பாதங்கள்
பலவகை சக்தியாயுதங்கள்
பார்ப்போற்றும் யுக்திகள்
அபூர்வ அவதாரங்கள்
கொண்டெடுத்த யார் இவர் ?
இரு பன்னீரு நேரமும்
பால்ப்பழ பூக்கள் படைத்தது
அழகான ஆபரணம் சூட்டி
ஆர்பரிக்கும் ஆராதனை காட்டி
அனுதினமும்
தலைவனை துதிப்பாடி
தன்னை நம்பாது
இவரை நம்பும் ஞாலம்
போற்றும் யார் இவர் ?
வேறு யார்
கல்லினை கடைந்து
கலைநயம் மேம்பட
கலைஞர்கள்
சிறப்பாய் செதுக்கிய
கற்ச்சிலை தானிவர்
எங்கே அவர் ?
ஆழில் அர்த்தங்கள் தேடு
ஆயிரமுண்டு அவரிடம்
அம்பென அடியேன்
கேள்விகள் எய்திட
யார் இவர்..?
எங்கே அவர்....????
-இரா.சுதர்சன்