Monday, 14 November 2011

அவர் காட்டுகிறார் பாரபட்சம்
பிறப்பு முதல் இறப்பு வரை......
பாரபட்சம் காட்டாதவர்களை  
அவர் என்கிறார்கள் - ஆனால்
அவரை மட்டும் தான்
பாரபட்சம் இன்றி பார்க்க முடிந்தது
இன்றோ
அதற்கும் பெயரிட்டார்கள்
பொது வழி, சிறப்பு வழி என்று....
அவர் இருக்கிறார் எனில்
அனைத்திலும் பாரபட்சம் எதற்கு ??
இல்லை என்றால் அவர்களுக்கு
வீதி தோறும் விடுதிகள் எதற்கு ????
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment