Monday, 20 February 2012

பட பட பேச்சும்
பால் போல சிரிப்பும்..
மீன் குவியாடி கண்ணும்
குளிக்கொண்ட கன்னமும்..
வெள்ளை மனசும்
வெகுளி குணமும்..
கார மிளகாய் மூக்கும்
கொத்தவரை காதும்..
சங்கு கழுத்தும்
சிவப்புக்கோவை உதடும்..
மேக கூந்தலும்
வானவில் புருவமும்..!
நீ கைக்கொடுத்த கையுக்கடி
கவிதை எழுத தோணுதடி..
காதலில் விழவில்லையடி
கால்வாசி உயிர் போனதடி..
இருந்தாலும் இக்கணம்
நோகுதே என்மனம்....!!
-இரா.சுதர்சன்








No comments:

Post a Comment