Friday, 14 August 2015

நிழல்.. (அவனும் - அவனது நண்பனும், பகுதி - 1 )


நிழல்
(அவனும் - அவனது நண்பனும், பகுதி - 1 )



அதீத ஆசையுள்ள சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நிம்மதியென்பது இருளில் நிழல் போலவே !


குடும்ப வாழ்க்கை, உற்றார் உறவினர்கள், நல்ல நண்பர்கள், பிறந்தநாள், பண்டிகைகள், சுக துக்க நிகழ்சிகள் என ஏதுமில்லாது தளர்ந்துபோய் இத்தனையும் ஒருசேர பெற்று ஓரிடத்தில் ஆணித்தனமாக வேரூன்ற நினைப்பவனவன் .


நடுத்தர குடும்பம், சாதாரண மேற்ப்பார்வையாளரான தந்தை, தந்தையின் தொடர் பணியிட மாற்றங்கள் என விடுதியில் தங்கி தனது பள்ளி பருவத்தை தொடங்கியவன் வெவ்வேறு பள்ளி கல்லூரிகள் என ஊர் ஊராக ஒரு நாடோடி போல சுற்றி தனது படிப்பை முடித்தான். பட்டப்படிப்பை முடித்த கையோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தனது சொந்த ஊரை விட்டு ஆயிரம் மயில்கள் கடந்து போய் பணியிலும் அமர்ந்தான்.


தொழில்நுட்ப வளர்ச்சிகளால் தொலைபேசி, ஒளிப்பேசி, சமூக வலைத்தளங்கள் என இருந்தாலும் அவைகளின் உதவியால் அவ்வப்போது குடும்பத்தாருடன் பேசி தற்காலிகமான மகிழ்ச்சி கொண்டான்.
விதி யாரைத்தான் விட்டது, அலுவலக நண்பர்களிடம் அளவு கடந்து நட்பு கொண்டாடினான் ஆயினும் தாமரை இலை மேல் நீர் போல ஒட்டியும் ஒட்டாத அலுவலக நண்பர்கள் மத்தியில் மிகவும் வெறுத்துப்போனான்.


அவன் பணியாற்றும் அன்னிறுவனமும் அவனை தனது தலைமை அலுவலகத்தில் ஆறு மாதம் வெளியூரில் உள்ள கிளை அலுவலகத்தில் ஆறு மாதம் என அலைகழிக்க ஆரம்பித்தது.
வேலையை வெறுத்து பணியினை ராஜினாமா செய்யத் துணிந்த அவன் கண்களை தங்கையின் திருமணம்,கல்வி மற்றும் வீட்டிர்க்கான வங்கிக்கடன், என ஒரு சேர மறைத்தன.


தனிமை தனிமை என தனக்கென்ற ஓர் தனிமையான உலகத்தில் வெறுத்துப்போன அவன், நடுஜாமத்தில் இருள் சூழ்ந்த தனது அறையில் கண்ணீர் பெருக்கெடுக்க மின்விசிறியை பார்த்துக்கொண்டே குடும்ப வாழ்க்கை, உற்றார் உறவினர்கள்,நல்ல நண்பர்கள், பிறந்தநாள், பண்டிகைகள், சுக துக்க நிகழ்சிகள் என அத்தனையும் ஒருசேர பெற்று ஓரிடத்தில் ஆணித்தனமாக தன்னை வேரூன்ற வேண்டும் என தன் ஆசைகளை அவனது உயிர் நண்பனான நிழலிடம் அசைபோட தொடங்கினான் எப்போதும்போல !!


- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment